ஜார்க்கண்ட்: மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன- 2 பேர் பலி- 40 பேர் படுகாயம்!

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பை நோக்கி சென்ற ஹவுரா- சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் (12810) ரயிலின் 3 பெட்டிகள் இன்று ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் அருகே பாரபம்பு என்ற கிராமத்தில் திடீரென தடம் புரண்டன. மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 2 பயணிகள் உயிரிழந்தனர்; மேலும் 40 பயணிகள் படுகாயமடைந்தனர். அப்பகுதியில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மும்பை நோக்கி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் ஜார்க்கண்ட் மாநிலம் சக்கரதார்பூர் அருகே பாரபம்பு என்ற கிராமத்தின் வழியே சென்ற போது திடீரென தடம் புரண்டன. இதில் பயணிகள் நிலைகுலைந்து இடிபாடுகளில் சிக்கினர். ரயில் பெட்டிகள் தடம்புரண்ட இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

train accident jharkhand

மும்பை- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட சம்பவம் தொடர்பான உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் திடீரென தடம் புரண்டது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+