ஜார்க்கண்ட்: மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன- 2 பேர் பலி- 40 பேர் படுகாயம்!
ராஞ்சி: மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பை நோக்கி சென்ற ஹவுரா- சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் (12810) ரயிலின் 3 பெட்டிகள் இன்று ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் அருகே பாரபம்பு என்ற கிராமத்தில் திடீரென தடம் புரண்டன. மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 2 பயணிகள் உயிரிழந்தனர்; மேலும் 40 பயணிகள் படுகாயமடைந்தனர். அப்பகுதியில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மும்பை நோக்கி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் ஜார்க்கண்ட் மாநிலம் சக்கரதார்பூர் அருகே பாரபம்பு என்ற கிராமத்தின் வழியே சென்ற போது திடீரென தடம் புரண்டன. இதில் பயணிகள் நிலைகுலைந்து இடிபாடுகளில் சிக்கினர். ரயில் பெட்டிகள் தடம்புரண்ட இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட சம்பவம் தொடர்பான உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் திடீரென தடம் புரண்டது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications