தடம் புரண்ட 2 பெட்டிகள்.. மகாராஷ்டிராவில் ரயில் சேவை பாதிப்பு.. தடம் மாற்றம்.. மத்திய ரயில்வே தகவல்!
மும்பை: மகாராஷ்டிராவில் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. கசாரா அருகே சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கசாரா ரயில் நிலையம் அருகே இன்று மாலை 6.30 மணியளவில் சரக்கு ரயில் ஒன்றின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

தகவல் அறிந்ததும், ரயில்வே உடனடியாக, மருத்துவ உபகரணங்களுடன் மறுசீரமைப்புக்கான நிவாரணப் பொருட்களைக் கொண்ட விபத்து நிவாரண ரயில்களை உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பியது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ரயில் தடம் புரண்டதால், பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து மற்றும் நடுவழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும், இகத்புரி முதல் கசாரா வரையிலான பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல்வேறு ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பயணிகள் ரயில்கள்:
12261 ஹவுரா எக்ஸ்பிரஸ் மும்பை சிஎஸ்எம்டி (சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்) அசங்கான் நிலையம்
12105 சிஎஸ்எம்டி-கோண்டியா விதர்பா எக்ஸ்பிரஸ் காட்கோபர் நிலையம்
11401 மும்பை சிஎஸ்எம்டி-அடிலாபாத் நந்திகிராம் எக்ஸ்பிரஸ் - ஓம்பர்பல்லி ரயில் நிலையம்.
12109 மன்மட் பஞ்ச்வாடி எக்ஸ்பிரஸ், விக்ரோலி ரயில் நிலையம்
17612 CSMT நந்தே எக்ஸ்பிரஸ்,
12137 CSMT ஃபிரோஸ்பூர் பஞ்சாப் மெயில் எக்ஸ்பிரஸ்,
12173 LTT பிரதாப்கர் எக்ஸ்பிரஸ் கசரா நிலையத்தில்
12289 CSMT நாக்பூர் துரந்தோ எக்ஸ்பிரஸ்
Total DN mail express trains affected will be-
— Central Railway (@Central_Railway) December 10, 2023
1) 12261 CSMT Howrah exp- at Asangaon station
2) 11401 CSMT Adilabad nandigram exp- at Ombarmalli station
3) 12105 CSMT-gondia vidarbha exp- at ghatkopar station
4) 12109 CSMT Manmad panchvati exp- at vikroli station
5) 17612 CSMT…
கடந்த ஜூன் மாதம் ஒடிசா மாநிலம் பாலசோரில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பீகார் மாநிலம் பாட்னா அருகிலும், ஆந்திர பிரதேச மாநிலம் விசாகபட்டினம் அருகிலும் ரயில் தடம் புரண்டு விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாகினர். கடந்த மாதம் ஒடிசா மாநிலத்தில் ரயில் தடம் புரண்ட நிலையில், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. 4 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய நிலையில், ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications