பெரிய திருப்பம்! தாக்கரேவுக்கு ஆதரவாகக் களமிறங்கிய திரிணாமுல் காங்கிரஸ்.. ஒரே டார்கெட் பாஜக

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் தொடரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக திரிணமுல் காங்கிரஸ் குதித்துள்ளது.

மகாராஷ்டிராவில் இப்போது பெரும் அரசியல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நிமிடமும் மகாராஷ்டிர அரசியலில் தொடர்ந்து திருப்பங்கள் அரங்கேறி வருகிறது.

இந்த அத்தனை குழப்பங்களையும் தொடங்கி வைத்தவர் சிவசேனாவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே! அவர் இரு நாட்களுக்கு முன்பு அதிருப்தி எம்எல்ஏக்கள் உடன் மாயமானார்.

 மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

சிவசேனாவுக்கு மொத்தம் 55 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அவர்களில் பலர் ஷிண்டே பக்கம் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று மாலை கூட சிவசேனா எம்எல்ஏக்கள் இருவர் ஷிண்டே முகாமில் இணைந்ததாகக் கூறப்பட்டது. முதலில் குஜராத்தின் சூரத் மாநிலத்தில் தங்க வைக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் பின்னர், அசாம் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஷிண்டா

ஷிண்டா

ஷிண்டாவால் மகாராஷ்டிராவின் கூட்டணி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரேவும் தான் பதவி விலகத் தாயாராக உள்ளதாக நேற்று அறிவித்தார். தனது ராஜினாமா கடிதம் தயாராக உள்ளதாகவும் அதை அதிருப்தியாளர்கள் ஆளுநர் மாளிகையில் கொடுத்துவிடலாம் என்றும் தெரிவித்தனர். அத்துடன் நிற்காமல் அரசின் அதிகாரப்பூர்வ இல்லத்தையும் காலி செய்தார்.

 திரிணாமுல்

திரிணாமுல்

இந்நிலையில், சிவசேனாவுக்கு ஆதரவாக இப்போது திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்கி உள்ளது. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கவுகாத்தியில் உள்ள ஹோட்டலுக்கு வெளியே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இன்று காலை மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அஸ்ஸாம் தலைவர் ரிபுன் போரா தலைமையில் போராட்டம் நடந்த நிலையில், அங்குப் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அட்டாக்

அட்டாக்

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசைக் கவிழ்க்க அசாமில் ஆளும் பாஜக அரசு நேரடியாக உதவிகளைச் செய்வதாக திரிணாமுல் கட்சியினர் சாடினர். மோசமான வெள்ளத்தால் அசாம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் துயரைப் போக்க மாநில பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திரிணாமுல தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

வெள்ளம்

வெள்ளம்

பிரம்மபுத்திரா மற்றும் பராக் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மே மாதத்தில் இருந்து இதுவரை 89 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில் மக்களுக்கு உதவாமல் தாக்கரே அரசைக் கவிழ்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக திரிணாமுல் கட்சி சாடி உள்ளது.

Recommended Video

    Maharashtra அரசியல் குழப்பம்.. முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை _Politics
    போராட்டம்

    போராட்டம்

    நேற்றைய தினம் தான் சூரத் நகரில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் கவுஹாத்தியில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்டனர். எம்எல்ஏக்கள் வரச் சற்று நேரத்திற்கு முன்பு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அங்கே இருந்தார். அதையெல்லாம் வைத்துத் தான் திரிணாமுல் காங்கிரஸ் இப்போது போராட்டத்தில் குதித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+