பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் சரத்பவார்.. தேவை இல்லாத குழப்பம்- சரத்பவார் மீது சிவசேனா பாய்ச்சல்!
மும்பை: பிரதமர் மோடியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஒரே மேடையில் அமர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது எதிர்க்கட்சிகளின் "இந்தியா "கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.
காங்கிரஸை உள்ளடக்கிய 26 எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா " கூட்டணியை உருவாக்கி உள்ளன. லோக்சபா தேர்தலுக்காக இந்த கூட்டணி உருவாக்கப்பட்டிருக்கிறது. இக்கூட்டணியின் மூத்த தலைவராக இருப்பவர் சரத்பவார்.

எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறும் போது சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபடுத்தப்பட்டது. தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் தலைமையில் ஒரு குழுவினர் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜகவில் இணைந்தனர். இதனால் தேசியவாத காங்கிரஸ் பலவீனப்படுத்தப்பட்டது.
பெங்களூர் கூட்டம்: இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் அஜித் பவார், ஃபிரபுல் பட்டேல் உள்ளிட்டோர் தொடர்ந்து அவரை சந்தித்து வந்தனர். ஆனால் ஒருவழியாக சரத்பவார், பெங்களூரில் 2-வது நாள் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார்.
மோடியுடன் ஒரே மேடையில்: ஆனாலும் சரத்பவார் தொடர்ந்து "இந்தியா" கூட்டணியில் நீடிப்பாரா? இல்லையா? என்கிற சந்தேகத்தை சரத்பவார்- அதானி சந்திப்புகள் உள்ளிட்டவை வலுவாக உருவாக்கிக் கொண்டிருந்தன. இந்நிலையில் திடீர் திருப்பமாக மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் நேற்று சரத்பவார் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் அதிருப்தி கோஷ்டி துணை முதல்வர் அஜித்பவாரும் பங்கேற்றனர். ஆனாலும் சரத்பவாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதுதான் "இந்தியா" கூட்டணியில் அதிருப்தியையும் புகைச்சலையும் கிளப்பி இருக்கிறது.
சிவசேனா கடும் அதிருப்தி: "இந்தியா" கூட்டணியின் மற்றொரு முக்கிய கட்சியான சிவசேனா இந்த அதிருப்தியை தமது சாம்னா நாளிதழில் வெளிப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா நாளிதழில் எழுதப்பட்டுள்ளதாவது: பிரதமர் மோடிதான், தேசியவாத காங்கிரஸை ஊழல் கட்சி என முத்திரை குத்தியவர். அத்துடன் தேசியவாத காங்கிரஸை இரண்டாக பிளவுபடுத்தியதும் பாஜகதான். இத்தகைய நிகழ்ச்சிகளில் சரத்பவார் பங்கேற்பது தவறு இல்லைதான். ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் "இந்தியா" கூட்டணி என்ற பெயரில் ஒன்றிணைந்து நிற்கும் தருணத்தில் சரத்பவார் இப்படி பங்கேற்றிருப்பது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். மூத்த தலைவரான சரத்பவார் இதனைத் தவிர்த்திருக்கலாம். தமது நிலைப்பாடு குறித்து சரத்பவார் இனி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு சாம்னா நாளிதழில் எழுதப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications