ஓட்டல் அறையில் பெண் டாக்டர் கையில் குறிப்புடன் இருந்த கோலம்.. மகாராஷ்டிராவை உலுக்கிய எஸ்ஐ இவர் தான்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டம் பல்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் 28 வயது பெண் டாக்டர், ஓட்டல் அறையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இவர் ஓட்டல் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் இரவில் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து பார்த்த போது அவர் உயிருடன் இல்லை. அவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தனது உள்ளங்கையில் குறிப்பு எழுதியிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், அங்குள்ள சத்தாரா மாவட்டம் பல்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வருகிறார். அரசு மருத்துவமனையில் பணியாற்றும் இளம் பெண் டாக்டர், அருகே உள்ள ஓட்டல் அறையில் தங்கியிருந்து வேலை செய்து வந்திருக்கிறார்.

ஆனால் நேற்று பெண் டாக்டர் நேற்று முன்தினம் ஓட்டல் அறையில் இருந்து வெளியே வரவே இல்லை. இதனால் ஓட்டல் ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து உடனே அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மாற்றுச்சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பெண் டாக்டர் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே பெண் டாக்டர் தனது உள்ளங்கையில் தற்கொலை குறிப்பை எழுதியிருக்கிறார். அதில் சத்தாரா போலீசில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே தன்னை கடந்த 5 மாதமாக பலாத்காரம் செய்ததாகவும், சாப்ட்வேர் இன்ஜினியர் பிரசாந்த் பங்கர் என்பவர் தனக்கு மனரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் குறிப்பில் கூறியிருந்தார். பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் கடித வடிவில் தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைப்பார்கள். ஆனால் இந்த வழக்கில் உயிரைவிட்ட பெண் டாக்டர் உள்ளங்கையில் காரணத்தை எழுதியிருந்தார்.
இந்த விவகாரம் மகாராஷ்டிரா மாநிலத்தையே உலுக்கியது. இதையடுத்து பெண் டாக்டர் குற்றம்சாட்டிய போலீஸ் அதிகாரியை உடனடியாக பணி இடைநீக்கம் செய்யும்படி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார். அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே, சாப்ட்வேர் என்ஜினீயர் பிரசாந்த் பங்கர் ஆகியோர் மீது பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் பதிவு செய்தனர். மேலும் டாக்டரின் தற்கொலை குறிப்பின் அடிப்படையில் தீவிர விசாரணையை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆகியோர் எந்த நேரமும் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளதால், மகாராஷ்டிராவை ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications