Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தலையே சுத்துது".. கடிச்சு வெச்சிட்டாராம் மனைவி.. குறுக்கே மாமியார்.. காரணம் கேட்டால் ஆடிபோயிடுவீங்க

கணவன் திருமண தேதியை மறந்தால் ஒரு பெண் ஆவேசமாக உடம்பெல்லாம் கடித்து வைத்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

மும்பை: கணவர் மீது கோபம் கொண்ட பெண் ஒருவர் விவாகரத்து வரை சென்றுள்ளார்.. இந்த பெண் விவாகரத்து வரை சென்றதுகூட பிரச்சனை இல்லை.. ஆனால், விவாகரத்துக்கு இவர் சொன்ன காரணம் இருக்கே? அங்கேதான் இடிக்குது.

மும்பையின் காட்கோபரில் வசித்து வருகிறார்கள் அந்த தம்பதியினர்.. கணவர் பெயர் விஷால் நங்ரே.. 32 வயாகிறது.. மனைவி பெய்ர கல்பனா.. 32 வயதாகிறது..

ஒரு கொரியர் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் விஷால்.. கல்பனா, அங்குள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

மணநாள் விழா

மணநாள் விழா

கடந்த பிப்ரவரி 18, 2018ம் தேதிதான் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது... அதாவது கல்யாணம் ஆகி இவர்களுக்கு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த 18ம் தேதி 6வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளனர்.. அதனால், இந்த பிப்ரவரி 18ம் தேதி, தங்களுடைய கல்யாண நாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக கல்பனா நிறைய பிளான்களை செய்துள்ளார்.. இதனால், பிப்ரவரி 18-ம் தேதிக்கு முன்பு, தன்னுடைய பிளானை பற்றி விஷாலிடம் சொல்லி உள்ளார் கல்பனா.. ஆனால், விஷாலுக்கு அவருடைய திருமண நாளே மறந்துப்போய்விட்டது.

கல்பனா கல்பனா

கல்பனா கல்பனா


நம் திருமண நாள் தேதி எப்போது? என்று கல்பனா கேட்கவும், திருதிருவென விழித்துள்ளார் விஷால்.. இதனால் கல்பனாவுக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது.. உடனே சண்டையும் ஆரம்பமாகிவிட்டது.. வழக்கமாக எப்போதுமே கல்பனா இப்படித்தான் சண்டை போடுவாராம்.. உடனே விஷாலும், மனைவியை சமாதானப்படுத்துவாராம்.. அந்தவகையில், சம்பவத்தன்றும், ஆவேசத்துடன் காணப்பட்ட கல்பனாவை, விஷால் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், கல்பனா அந்த பிரச்சனையை விட்டு வெளியே வரவேயில்லை.. அன்றைய தினம் என்றில்லாமல், மறுநாளும் அதே சண்டையை தொடர்ந்தார்.

கெட்ட கெட்ட வார்த்தை

கெட்ட கெட்ட வார்த்தை

அன்றைய தினம் சாயங்காலம், விஷால் தன்னுடைய வீட்டுக்கு வெளியில் காரை கழுவி கொண்டிருந்தார்.. அப்போது வேலை முடிந்து கல்பனா வந்துள்ளார்.. அப்போதும் அவரது முகம் கோபத்திலேயே இருந்துள்ளார்.. இதனால், அவரை மறுபடியும் சமாதானப்படுத்த வீட்டிற்குள் நுழைந்துள்ளார் விஷால்.. அப்போது கல்பனா, இனி உன்னுடன் சேர்ந்து வாழ இஷ்டமில்லை, உடனே டைவர்ஸ் வேண்டும்" என்று கேட்டதுடன், விஷாலையும், அவரது அம்மாவையும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டியுள்ளார்.. இதைக் கேட்டு அதிர்ந்த விஷால், சாதாரண விஷயத்தை ஏன் பெரிதுபடுத்துகிறாய் என்று கேட்டுள்ளார்..

கடித்து கடித்து புண்

கடித்து கடித்து புண்

உடனே கல்பனா, அன்றைய தினம் இரவு 9:30 மணிக்கு, தன்னுடைய பெற்றோரையும், அண்ணனையும் வீட்டுக்கு உடனடியாக வரவழைத்தார்.. இந்த சின்ன விஷயத்தை பெரிதுப்படுத்தி, அவர்களும் கேள்வி கேட்கவும் விஷாலுக்கு கோபம் அதிகமானது.. அப்போதுதான் வாக்குவாதமும் வெடித்துள்ளது.. இந்த வாக்குவாதம் முற்றி, ஒருகட்டத்தில், கல்பனா தன்னுடைய குடும்பத்தாருடன் சேர்ந்து விஷாலையும், அவரது அம்மாவையும் சரமாரியாக அடித்துவிட்டனர்.. அதுமட்டுமல்லாமல், அவர்களின் உடம்பெல்லாம் கடித்துவிட்டார் கல்பனா..

தலையே சுத்துது

தலையே சுத்துது

இதில் படுகாயடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. இதற்கு பிறகு, காட்கோபர் போலீசில் புகார் தந்தார் விஷால்.. அதன்பேரில், போலீசார் கல்பனா, அவரது அண்ணன், அவரது பெற்றோர் மீது பிரிவு 323, 324, 327, 504 மற்றும் 506ன்கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன், அவர்களை விசாரணைக்கு ஆஜராக கூறி நோட்டீசும் அனுப்பியுள்ளனர்... இந்த விசாரணைக்கு பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றம் போலீசார் காவல்துறை தெரிவித்துள்ளனர்... ஆனால், திருமண தேதியை மறந்தது ஒரு குற்றமா? கல்பனா எதற்காக உண்மையிலேயே டைவர்ஸ் கேட்டார்? என்று மண்டை காய்ந்து போயுள்ளாராம் விஷால்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+