மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்- ஆளுநர் முடிவுக்கு காரணமே என்சிபி கேட்ட 2 நாள் அவகாசம்தான்!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் தற்போது ஜனாதிபதி ஆட்சி அமலாகியுள்ளது. இம்மாநிலத்தில் திடீரென ஜனாதிபதி ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்தது ஏன் என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக, சிவசேனாவை தொடர்ந்து 54 இடங்களை வென்ற 3-வது கட்சி என்ற அடிப்படையில் தேசியவாத காங்கிரஸுக்கு ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருந்தார். இன்று இரவு 8.30 மணி வரை தேசியவாத காங்கிரஸுக்கு ஆளுநர் ஆட்சி அமைக்க அவர் அவகாசம் கொடுத்திருந்தார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் தேசியவாத காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு ஆளுநரிடம் தேசியவாத காங்கிரஸ் கடிதம் மூலம் ஒரு கோரிக்கையை முன்வைத்தது.
அதில், ஆட்சி அமைப்பதற்கு மேலும் 2 நாட்கள் அதாவது 48 மணிநேர அவகாசம் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார், காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. காங்கிரஸ் இன்னமும் ஆதரவு கடிதத்தை தரவில்லை என கூறியிருந்தார்.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸின் 2 நாட்கள் அவகாச கோரிக்கையை ஆளுநர் கோஷ்யாரி நிராகரித்தார். அத்துடன் இன்று இரவு 8.30 மணிவரை தேசியவாத காங்கிரஸுக்கு கொடுத்த கால அவகாசத்தையும் ஆளுநர் கோஷ்யாரி ரத்து செய்தார்.
இதன்பின்னர்தான் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க இயலாத நிலை இருக்கிறது; ஆகையால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு ஆளுநர் கோஷ்யாரி பரிந்துரைத்தார். உடனடியாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த பரிந்துரை ஏற்கப்பட்டது.
பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு இதை உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது. தற்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் கிடைத்ததால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications