டிசிஎஸ் தொடர்ந்து விப்ரோ.. பாலியல் அச்சுறுத்தல், உடலுறவு, மதமாற்றம்.. பெண் ஐடி ஊழியரின் பகீர் புகார்!
இந்திய ஐடி சேவைத் துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நாசிக் கிளையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் 'கார்ப்பரேட் ஜிகாத்' எனப்படும் மதமாற்ற மற்றும் பாலியல் அச்சுறுத்தல் விவகாரம் வெடித்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.
அந்த சம்பவத்தின் அதிர்ச்சி அலைகள் முழுமையாக அடங்குவதற்குள், தற்பொழுது விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies) நிறுவனத்தின் புனே கிளையில் இருந்து அதைவிட மிகக் கொடூரமான ஒரு மதமாற்ற அச்சுறுத்தல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தான் பணிபுரிந்த இடத்தில் மிகக் கடுமையான மதப் பாகுபாட்டையும், பாலியல் ரீதியான மன உளைச்சலையும் சந்தித்ததாகப் பகீர் குற்றச்சாட்டுகளைப் பல ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளார். இது தொடர்பாகப் புனேயில் உள்ள ஹின்ஜவடி காவல் நிலையத்தில் (Hinjawadi Police Station) அந்தப் பெண் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதோடு, விப்ரோ நிறுவனத்திற்குத் தனது வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸையும் அனுப்பியுள்ளார்.
புனேயில் வெடித்த பகிரங்கக் குற்றச்சாட்டு
புனேயில் உள்ள சிரமிக் பத்திரிகையாளர் பவனில் (Shramik Patrakar Bhavan) இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பு நடத்திய மிக முக்கியமான செய்தியாளர் சந்திப்பில் இந்த அதிர்ச்சியூட்டும் விபரங்களை அந்தப் பெண் ஊழியர் நேரடியாகப் போட்டு உடைத்துள்ளார்.
தான் விப்ரோ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சமயத்தில், தன்னுடன் வேலை செய்த ஷஹினா ரஃபிக் (Shahina Rafiq) என்ற சக பெண் ஊழியர், தன்னைத் தொடர்ந்து இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு கடுமையான மன ரீதியான அழுத்தங்களைக் கொடுத்து வந்ததாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, ஒரு முஸ்லிம் நபருடன் உடலுறவு சார்ந்த நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளுமாறும் அவர் தன்னைத் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
துபாய் சொகுசு வாழ்க்கை மற்றும் ஷேக்குகளின் ஆசைவார்த்தை
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஊழியர் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததை உன்னிப்பாகக் கவனித்த ஷஹினா, அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார். அலுவலக வேலை சார்ந்த அழைப்புகளைத் தாண்டி, அந்தப் பெண்ணின் தனிப்பட்ட மொபைல் எண்ணிற்குத் தொடர்ந்து அழைத்து அவரிடம் மிக நெருக்கமாகப் பழகத் தொடங்கியுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணின் பர்சனல் வாழ்க்கை குறித்து மிகவும் அநாகரீகமான மற்றும் அசிங்கமான கேள்விகளை ஷஹினா எழுப்பத் தொடங்கியுள்ளார். மேலும், அந்தப் பெண் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி, அவரின் தனிப்பட்ட புகைப்படங்களை வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் அனுப்புமாறும் வற்புறுத்தியுள்ளார்.
இந்து மதத்தைக் கைவிட்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினால் வெளிநாடுகளில் மிகச் சிறந்த வேலை வாய்ப்புகளும், சொகுசான ஆடம்பர வாழ்க்கையும் கிடைக்கும் என்று கூறி ஷஹினா ஆசைவார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். ஒரு முஸ்லிம் நபருடன் உடலுறவு கொண்டால், துபாய்க்குச் சென்று குடியேறிவிட்டலாம், அங்குள்ள மிகப்பெரிய பணக்கார 'ஷேக்குகள்' (Sheikhs) மூலமாக பல்வேறு நன்மைகளை பெறலாம் என்று கூறி அந்தப் பெண்ணை மூளைச்சலவை செய்ய முயன்றுள்ளார்.
ஷஹினாவின் இந்த அத்துமீறிய வற்புறுத்தல்களால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் ஊழியர், அவரிடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்துவிட்டுத் தனது தொடர்புகளைப் பொதுவான அலுவலக வேலைகளோடு மட்டுமே சுருக்கிக் கொண்டுள்ளார்.
வேலையில் நீக்கப்பட்ட பெண்
இந்தத் திட்டமிட்ட மதமாற்ற மற்றும் ஒழுக்கக்கேடான பாலியல் அழுத்தங்களைத் தாங்க முடியாமல், பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் இது குறித்து விப்ரோ நிறுவனத்தின் உயர் நிர்வாகத்திடம் முறைப்படி அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
ஆனால், குற்றம் சாட்டப்பட்ட ஷஹினா மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, விப்ரோ நிறுவனத்தின் மேலாண்மை நிர்வாகம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஊழியரையே பழிவாங்கும் நோக்கில் கையாண்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், நிறுவனத்தின் பிரதிநிதிகள் அந்தப் பெண்ணை ஒரு அவசர 'மைக்ரோசாஃப்ட் டீம்ஸ்' (Microsoft Teams Meeting) ஆன்லைன் கூட்டத்திற்கு அழைத்துள்ளனர். அந்தக் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பு நியாயங்களை எதையுமே காதுகொடுத்துக் கேட்காமல், அவரின் பதிலைச் சொல்வதற்குக் குறைந்தபட்ச வாய்ப்புகளையும் தராமல், கட்டாயப்படுத்தி அவரின் ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக்கொண்டு அவரை வேலையை விட்டு அநியாயமாக நீக்கியுள்ளனர்.
ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்டுச் சட்ட நோட்டீஸ்
இது குறித்து அந்தப் பெண் ஊழியரின் வழக்கறிஞரான விவேக் போசாலே கூறுகையில், "அரசு விதிகளுக்கும் இயற்கை நீதிக்கும் முற்றிலும் முரணான வகையில், கடுமையான மிரட்டல் மற்றும் கட்டாயத்தின் பேரில் அந்தப் பெண்ணிடம் இருந்து விப்ரோ நிறுவனம் ராஜினாமாவைப் பெற்றுள்ளது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது விப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ள சட்ட நோட்டீஸில், அந்தப் பெண்ணை மீண்டும் அதே பணியில் பழைய ஊதியத் தொடர்ச்சியோடு அமர்த்த வேண்டும் என்றும், கட்டாயப்படுத்திப் பெறப்பட்ட ராஜினாமாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தால் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் மற்றும் சமூக அவப் பெயருக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், விப்ரோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் பகிரங்க மன்னிப்புக் கேட்டுத் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட நோட்டீஸுக்குப் பதில் அளிக்க விப்ரோ நிறுவனத்திற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சிவில், கிரிமினல் மற்றும் தொழிலாளர் நீதிமன்றங்கள் வாயிலாக விப்ரோ நிறுவனத்தின் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என அந்தப் பெண் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஐடி கார்ப்பரேட் நிறுவனங்களின் உள்ளே அரங்கேறி வரும் இத்தகைய மறைமுக மதமாற்ற மற்றும் பாலியல் அச்சுறுத்தல் கலாச்சாரம் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் உளவுத்துறையும், காவல்துறையும் மிகத் தீவிரமான விரிவான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்பொழுது இந்திய அளவில் வலுத்து வருகின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications