மோடியை கொல்ல பிளான் ரெடி.. ஆயுதமும் இருக்கு! வாண்டடாக வார்னிங் கொடுத்த பெண் கைது
மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமும், ஆயுதமும் தயாராக இருப்பதாக மிரட்டல் விடுத்த பெண்ணை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை காவல்துறையை தொடர்பு கொண்டு இப்பெண் மிரட்டல் விடுத்திருக்கிறார்.
கொலை மிரட்டல் விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர். மிரட்டலுக்கான காரணம், கைது செய்யப்பட்ட பெண்ணுடன் யார் யார் எல்லாம் தொடர்பில் இருந்தார்கள்? திட்டம் எந்த மாதிரியானது என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலை தேடி வருகின்றனர். பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லியில் ஆனந்த் விஹார் பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியுள்ளது.

வெடித்தது வெடிகுண்டா? என்கிற கோணத்தில் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெடிவிபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவ பகுதியில் வேறு எங்கேனும் வெடி பொருட்கள் இருக்கின்றதா? என்று வெடிபொருள் செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications