சர்வதேச யோகா தினம்.. மைசூரில் யோகாசனம் செய்த பிரதமர் மோடி.. நாடு முழுக்க பிரம்மாண்ட ஏற்பாடு!
மைசூர்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று மைசூரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
Recommended Video
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் இன்று 75 நகரங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், மைசூரு அரண்மனையில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மொத்தம் 15 ஆயிரம் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் முன்னிலையில் இன்று பிரதமர் மோடி யோகாசனம் செய்தார். இந்த வருடம் யோகாவிற்கான தீம் "மனித நோயத்திற்கான யோகா" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 8வது யோகா தினம் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி வெள்ளை உடையில் யோகா மேற்கொண்டார். பிரதமர் மோடியுடன் பாஜக நிர்வாகிகள் பலர் மேடையில் யோகா மேற்கொண்டனர். அதேபோல் நாடு முழுக்க மாநில தலைநகரங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஒவ்வொரு மாநில தலைநகரில் இருக்கும் ஆளுநர் மாளிகைகளில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அதேபோல் தனியார் அமைப்புகள் சார்பாகவும் யோகா நிகழ்ச்சிகள் நாடு முழுக்க இன்று நடத்தப்படுகின்றன. கடந்த 2 வருடமாக கொரோனா காரணமாக யோகா நிகழ்ச்சிகள் நேரடியாக நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் 2 வருடங்களுக்கு பின் இன்று யோகா நிகழ்ச்சிகள் மீண்டும் நேரடியாக நடத்தப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று டெல்லியில் யோகா செய்கிறார். அதேபோல் பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா நொய்டாவில் யோகா பயிற்சி செய்கிறார்.












Click it and Unblock the Notifications