Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் வாங்க தாத்தா.. கலங்கியபடி தேடும் குடும்பம்.. பார்த்தவர்கள் தகவல் சொல்லுங்களேன்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே காமேஸ்வரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் காணாமல் போய் இன்றுடன் 13 நாட்கள் கடந்துள்ளது. மே 11ம் தேதி காணாமல் போன அந்த முதியவரை அவரது குடும்பமே கலங்கியபடி தேடிவருகிறது.

துரைராஜ் என்ற 70 வயது முதியவரை காணவில்லை என்று வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் ஏராளமான போஸ்டர்கள் அடிக்கப்படட நிலையில், அதுபற்றி என்ன என்று நாம் விசாரித்தோம்.

A 70-year-old man is missing in Velankanni, Familys heartfelt request

அப்போது துரைராஜ் அவர்களின் குடும்பத்தினர் நம்மிடம் கூறிய தகவல்களை இப்போது பார்ப்போம். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ளது காமேஸ்வரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் வயது 70. இவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் . ஐந்து அடி 10 அங்குலம் உள்ளவர், மெல்லிய உடல் தேகம் உடையவர். வேகமாக நடக்கக்கூடியவர். காணாமல் போன அன்று கைலியும் துண்டும் மட்டுமே அணிந்து இருந்தார். சட்டை அணியவில்லை.

மே 11ம் தேதி அன்று காணாமல் போன அன்று அவர்களது ஊரில் உள்ள கோயிலில் அமர்ந்திருக்கிறார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து குடும்பத்தினர் தேடி உள்ளனர். ஆனால் வேளாங்கண்ணி பகுதியில் இருந்து துரைராஜ் மாயமானார். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து முதியவர் துரைராஜின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் துரைராஜின் தம்பி மகன் சுகுமார், தனது பெரியப்பாவை தேடி பல இடங்களில் அலைந்துள்ளார். அவர்களது குடும்பத்தினரும் பல இடங்களில் கடந்த 13 நாட்களாக தேடி அலைந்துள்ளனர். ஒவ்வொரு பெட்டிக்கடை மற்றும் டீக்கடைகளில் போஸ்டர்களை காட்டி தேடி உள்ளனர். சுமார் 30 கிலோ மீட்டர் தூரமுள்ள திருத்துறைப்பூண்டி வரை போய் தேடி இருக்கிறார்கள். அங்கும் அவர் இல்லை. வேளாங்கண்ணி சுற்றுவட்டாரம் முழுவதும் தேடப்பட்ட நிலையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியாக அவரை திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் பகுதியில் பார்த்ததாக மக்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் அங்கு சிசிடிவி அப்போது வேலை செய்யததால் அவர், அங்கிருந்து எந்த பக்கம் சென்றார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

காணாமல் போன முதியவர் துரைராஜ் பற்றி தகவல் தெரிந்தால், ராஜேந்திரன் 9489108915 என்ற தொலைப்பேசி எண்ணிலோ அல்லது சுகுமார் 9819861311 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம். காவல்துறையினர் முதியவரை கண்டுபிடிக்கும் விவகாரத்தில் துரிதமாக செயல்பட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+