என்னா ஸ்பீடு.. இலங்கையிலிருந்து நாகைக்கு சீறி வந்த “சிரியா பாணி” கப்பல்! காலையில தானே கிளம்புனுச்சு
நாகை: தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இன்று இலங்கை காங்கேசந்துறைக்கு புறப்பட்ட சிரியா பாணி பயணிகள் கப்பல் மீண்டும் நாகைக்கு திரும்பி உள்ளது.
இலங்கையின் காங்கேசந்துறைமுகத்திற்கு நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து செல்லும் 150 பயணிகள் செல்லும் விரைவு பயணிகள் கப்பல் சேவையை தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை இணைந்து தொடங்கி உள்ளன. இதற்காக க்நாகப்பட்டினத்தில் பயணியர் முனையம், துறைமுக கால்வாயை தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தன.

கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி அமைச்சர் எ.வ.வேலு நாகை துறைமுகத்தில் இந்த பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து, 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசந் துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் வாரியம், ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை மூலம் நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம், விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த பயணியர் கப்பல் பயணம், வெளிநாட்டு பயணம் என்பதால் ஒன்றிய அரசின் தொழிற்துறை பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கையாள ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் துவக்க ஒன்றிய அரசு உத்தேசித்துள்ளது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க பயணிகள் கப்பல் போக்குவரத்து, இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழ் மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள், வணிகம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதிகள், கலாச்சாரப் பகிர்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெறும்." என குறிப்பிடப்பட்டு இருந்தது.

கேரள மாநிலம் கொச்சியில் தயாரிக்கப்பட்ட சிரியா பாணி என்ற கப்பல் கடந்த வாரம் சனிக்கிழமை நாகை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு 2 நாட்கள் நடைபெற்றது. இந்த நிலையில், 10 ஆம் தேதி பயணிகளுக்காக கப்பல் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் அன்று கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக இந்த படகு சேவையை தொடங்கி வைத்தார். பயணிகளை ஏற்றிக்கொண்டு இலங்கையின் காங்கேசந்துறைமுகத்துக்கு சென்ற கப்பல் மாலை 30 பயணிகளுடன் நாகைக்கு திரும்பியது.












Click it and Unblock the Notifications