ஈபி ஊழியர்களுக்கு இலவச கட்டிங், ஷேவிங்.. நாகை நாவிதர்களின் சபாஷ் சேவை
மின் வாரிய ஊழியர்களுக்கு 2 பேர் இலவசமாக முடிதிருத்தம் செய்து வருகின்றனர்
நாகை: தங்கள் கடைக்கு வரும் மின்வாரிய ஊழியர்களுக்கு இலவசமாக கட்டிங், ஷேவிங் செய்ய முன் வந்திருக்கிறார்கள் 2 பேர்.
கஜா புயல் பாதிக்கப்பட்டதில் மிக முக்கியமான மாவட்டம் நாகை. இந்த மாவட்டத்தில் இருந்த அத்தனை மரங்களும், கரண்ட் கம்பங்களும் முறிந்து சாய்ந்து விழுந்து கிடந்தன.

இதனால் மின்வாரிய ஊழியர்களின் பணி அளப்பரியது. அதனால்தான் அமைச்சர்கள் முதல், கமல் உள்ளிட்ட பல தலைவர்கள் மின்வாரிய ஊழியர்களை வெகுவாக பாராட்டினார்கள்.
சாப்பிட கூட நேரம் இல்லாமல், இவர்கள் கரண்ட் கம்பத்தில் உட்கார்ந்து கொண்டும், தொங்கி கொண்டும் சாப்பிட்ட போட்டோக்கள் கூட இணையத்தில் வைரலாகியதை நாமும் கண்டோம்.
இப்போது வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர்களுக்கு 2 பேர் உதவ முன்வந்திருக்கிறார்கள். இவர்களின் பெயர் தேவதாஸ் மற்றும் ஏவி அருள் என்பது. இவர்கள் முடி திருத்தும் தொழிலாளர்கள். தங்கள் கடைக்கு வரும் மின்வாரிய ஊழியர்களுக்கு இலவசமாக கட்டிங், ஷேவிங் செய்ய முன் வந்திருக்கிறார்கள்.
இதற்காக தங்கள் கடையில் ஒரு நோட்டீஸ் போர்டையும் வைத்திருக்கிறார்கள். குடும்பம், குட்டிகளை விட்டுவிட்டு, எங்களுக்காக இங்கேயே தங்கி வேலை பார்த்தார்கள் மின்ஊழியர்கள். அவர்களின் உதவியை நாங்கள் எப்பவுமே மறக்க மாட்டோம்.
அவங்களுக்காக ஏதாவது உதவி செய்யணும்னு நினைச்சுதான் ஒரு மாசத்துக்கு முன்னாடியே இந்த முடிவு எடுத்து அவர்களுக்கு இலவசமாக கட்டிங், ஷேவிங் செய்து வருகிறோம். இதை பார்த்த அவர்களும் எங்களுக்கு மனசார நன்றி சொல்லிவிட்டு போகிறார்கள்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications