இதற்கு மேல் ஒன்றுமில்லை... விஷ பாட்டில்களுடன் போராட்டம்... நாகை விவசாயிகள் கண்ணீர்
நாகை: விளைநிலங்களில் கெயில் குழாய் பதித்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம், மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரம் கெயில் நிறுவனம், எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், விளைநிலங்களில் கெயில் குழாய் பதித்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக கூறி, முக்கறும்பூரில் பருத்தி வயலில் கையில் விஷ பாட்டில்களுடன் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சோறு போட்ட விவசாயிகள்
ஏற்கனவே மழை பொய்த்து போனதால், விவசாயிகள் படாதபாடு பட்டு வருகின்றனர். தற்போது, இருக்கிற ஒரே வாழ்வாதாரத்தையும் அழித்தால், எங்கே செல்வது என்று விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்தனர். நெருக்கடிகளால், ஊருக்கு சோறு போட்ட விவசாயிகள் பலர், விவசாயத்தை விட்டு, விட்டு கூலி வேலைக்கு சென்று வாழ்க்கையை ஓட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் கூறினர்.

கடும் எதிர்ப்பு
முன்னதாக, முடிகண்டநல்லூரில் விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் நாற்றுகளை நட்டுள்ள நிலையில், அதன் வழியாக குழாய்களை பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி விவசாயிகள் வயலில் இறங்கி உடலில் சேற்றை பூசிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குழாய்களை பதிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

கட்சித் தலைவர்கள் கண்டனம்
அதே சமயம், காவிரி டெல்டாவில் பயிர் இருக்கிற வயல்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்கிற வேலைகளை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருவதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications