மழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை
நாகை: நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் இந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மேல் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், பூம்புகார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
நாகை மாவட்டத்தில் நீண்ட மாதங்களுக்கு பிறகு கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் இந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மழையால் விவசாய நிலங்களை உழுது பயிர் செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியோடு உழவுப்பணிகளை துவக்க உள்ளனர்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாகை பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து இருந்தது. அன்று 8.30 முதல் 10 மணி வரை சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications