வாசலில் கிடந்த தாலி.. அதிர்ந்த கணவன்.. அழுதுகொண்டே தூக்கில் தொங்கிய துயரம்.. காதல் படுத்திய பாடு

காதல் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் தற்கொலை செய்துள்ளார் இளைஞர்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்தவர் அரவிந்த் குமார்.. 26 வயதாகிறது.. அதே பகுதியை சேர்ந்த சிவ நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்..

சிவந்தினிக்கு 22 வயதாகிறது.. இது இவர்களின் 3 வருட காதல்..! ஒருகட்டத்தில் இந்த காதல் விவகாரம் நந்தினி வீட்டில் தெரிந்துவிட்டது.. அதனால் எதிர்ப்பும் எழுந்தது.

 மகளை காணவில்லை

மகளை காணவில்லை

தங்கள் பெற்றோரை சமாதானப்படுத்த முடியாது என்று தெரிந்த காதலர்கள் இருவரும் வெளியூருக்குச் சென்று கோவிலில் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், மகளை காணவில்லை என்று நந்தினியின் வீட்டில் கடந்த 11ம் தேதி வேளாங்கண்ணி ஸ்டேஷனில் புகார் தந்துள்ளனர்.. இது தொடர்பாக போலீசாரும் விசாரணையில் இறங்கியபோது, புது மண தம்பதி இருவருமே கடந்த 19ம் தேதி வேளாங்கண்ணி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளனர்..

 போலீஸ் ஸ்டேஷன்

போலீஸ் ஸ்டேஷன்

இருவரிடமும் ஸ்டேஷனிலேயே பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.. இந்த விஷயம் தெரிந்து, பெண் வீட்டை சேர்ந்த அத்தனை பேரும் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டனர்.. நந்தினியின் அப்பா ராஜேந்திரன், அண்ணன் தம்பிகள், உறவினர் எல்லாரும் சேர்ந்து அவரை மிரட்டி, தாலியை கழற்றி போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே வீசியதாக கூறப்படுகிறது.. அத்துடன் சிவநந்தினியையும் மிரட்டி வீட்டிற்கு கையோடு அழைத்து சென்றிருக்கிறார்கள்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

கிளம்பி செல்லும்போது, அரவிந்த் குமாரை அவமானப்படுத்தி பேசி கொலைமிரட்டலும் விடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது.. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அரவிந்த்குமார், தன் வீட்டிற்கு வந்து அழுது கொண்டே இருந்தார்.. யாரிடமும் பேசவில்லை.. காதல் மனைவியை அவர்கள் வீட்டில் கையோடு அழைத்து சென்ற அதிர்ச்சியில் இருந்தும் மீளவில்லை.. இறுதியில் அழுது கொண்டே தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 விசாரணை

விசாரணை

அரவிந்த் குமாரின் சடலத்தை பார்த்து, அவரது குடும்பத்தினர் கதறி கதறி அழுதனர்.. அம்மா விஜயலக்ஷ்மி, வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் தந்ததன் பேரில், அரவிந்த்குமார் சடலத்தை கைப்பற்றிய வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... இதனிடையே நந்தினி கழுத்தில் கட்டப்பட்ட தாலி, வேளாங்கண்ணி போலீஸ் ஸ்டேஷனில் வீசியெறிந்த தாலி, கோயிலில் தம்பதி இருவரும் எடுத்து கொண்ட போட்டோக்கள போன்றவை சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+