நாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி கைது... காவல்துறையினரால் 2.30 மணி நேரம் சிறைவைத்து விடுவிப்பு
நாகை: நாகை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவருமான தமிமுன் அன்சாரி, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 2.30 மணி நேர சிறைவைப்பிற்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.
முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வேதச நாடுகள் நீதி வழங்கக் கோரி திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தார் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. மே 17 இயக்கம் அழைப்பை ஏற்று அவர் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த இருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இரண்டு அடி தூரத்திற்கு ஒருவராக நின்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் தமிமுன் அன்சாரி தலைமையில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கோரி முழக்கம் எழுப்ப இருந்தனர்.

இந்நிலையில் அங்கு சென்ற போலீஸ் தமிமுன் அன்சாரி உட்பட அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து திருத்துறைப் பூண்டியில் உள்ள திருமணம் மண்டபத்திற்கு அழைத்துச்சென்று இரவு 8 மணி வரை சிறைவைத்திருந்தது. இதனிடையே அவர்கள் அனைவரும் ரமலான் மாதம் நோன்பு நோற்றிருந்ததால், அவர்கள் நோன்பு திறப்பதற்கு(இஃப்தார்) தேவையான தண்ணீர், பிஸ்கெட், குளிர்பானம் உள்ளிட்டவைகளை போலீஸாரே ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு தமிமுன் அன்சாரியை காவல்துறை விடுவித்தது. அவர் கைது செய்யப்பட்ட தகவலறிந்து இயக்குநர்கள் களஞ்சியம்,கவுதமன், காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன், மே 17 இயக்கத்தினர் என பல தரப்பினரும் உடனடியாக தமிமுன் அன்சாரியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications