நாகையில் திடீர் கோயில்... சாமியாக மாறிய வேப்பமரம்! ஸ்வீட்டான பால் வருதாம்
நாகை: ஜெகநாதபுரத்தில் உள்ள வேப்ப மரத்தில் பால் பொங்கி வழிந்து வருவதால் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் வேப்ப மரத்துக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
Recommended Video
தமிழ்நாட்டில் திடீர் கோயில்களும் திடீர் சாமியார்களும் தோன்றுவது புதிதல்ல. இயல்புக்கு மாறாக வித்தியாசமாக ஏதாவது நடந்துவிட்டால் உடனே கடவுள் அவதரித்து இருப்பதாகக்கூறி அதை கோயிலாக மாற்றி வழிபட தொடங்கிவிடுவார்கள். இவ்வாறு பல போலி சாமியார்களும் உருவாகி மக்களை ஏமாற்றிய கதையை நாம் பல முறை கேட்டிருப்போம்.

நாகப்பட்டினம் மாவட்டம மஞ்சக் கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட புத்தூர் ஜெகநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தாத்தா சண்முகம். இவரது வீட்டின் அருகே இரண்டு ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரம் இருந்துள்ளது. இந்த நிலையில், அந்த வேப்பமரத்திலிருந்து திடீரென புத்தாண்டு அன்று வெள்ளை நிற திரவம் நுரையுடன் வடிந்தது.

இதனை சுவைத்துப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அது இனிப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த அந்த திரவம் நாளாக நாளாக மரத்தில் இருந்து அதிகமாகி பொங்கி வடியத் துவங்கியது. வேப்பமரத்தில் பால் பொங்கி வழிகிறது என்ற செய்தி சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் காட்டுத்தீயாக பரவத் தொடங்கியது. அதன் விளைவாக நூற்றுக்கணக்கான மக்கள் வேப்பமரத்தை ஆச்சரியமாக பார்த்து வழிபட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்றிரவு அந்த வேப்ப மரத்திற்கு மஞ்சள் புத்தாடைகள் உடுத்தி அபிசேகம் செய்த கிராம மக்கள் படையல் செய்தனர். இதுப்பற்றி அந்த கிராம மக்கள் கூறுகையில், 50 ஆண்டுகள் பழமையான மரங்களில் பால் போன்ற திரவம் எப்போதாவது வடியும். ஆனால் இரண்டு ஆண்டுகளே ஆன சிறிய மரத்தில் பால் வடிவது ஆச்சர்யமாக உள்ளது என்கின்றனர்.
இந்த பால் வடியும் வேப்ப மரத்தை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களும் ஆச்சர்யத்துடன் பார்த்து வணங்கி செல்கின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications