"ஜாலி"யாக இருந்த அபர்ணா.. அழுது அரற்றிய 4 வயது மகன்.. அடுத்து நடந்த கொடூரம்.. அதிர்ந்து போன நாகை!
பெற்ற குழந்தையை கொன்ற தாய் கைதாகி உள்ளார்
நாகை: கள்ளக்காதலனுடன் அபர்ணா ஜாலியாக இருந்துள்ளார்.. அந்த நேரம் பார்த்து அவரது 4 வயது மகன் அழுதுள்ளான்.. உடனே துப்பட்டாவால் ஒரே இறுக்கு இறுக்கி தன் குழந்தையை கொன்றுவிட்டார் அபர்ணா.. இதனால் நாகையே அதிர்ந்து போயுள்ளது..!
நாகையை அடுத்துள்ளது மேல வாஞ்சூர் என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் கார்த்தி.. இவரது மனைவி அபர்ணா.. கடந்த 2014-ல் இவர்களுக்கு கல்யாணம் ஆகி உள்ளது.
ஆனால், ஒரே வருஷத்தில் 2 பேருக்கும் தகராறு வந்து பிரிந்துவிட்டனர்.. ஆனாலும் உறவினர்கள் சமாதானப்படுத்தி இவர்களை மறுபடியும் ஒன்று சேர்ந்து வாழும்படி அறிவுரை சொன்னார்கள்.. இவர்களுக்கு 4 வயதில் ஒரு
மகன் இருக்கிறான்.
பொங்கி பிரவாகமாகக் கொட்டும் தூத்சாகர் அருவி... ரயிலை மூழ்கடித்துச்செல்லும் தண்ணீர் - வைரல் வீடியோ
சென்னை
கார்த்தி சென்னையில் கார் டிங்கரிங் வேலை பார்த்து வருகிறார்.. இந்த நேரத்தில் அபர்ணாவுக்கு சுரேஷ் என்ற ஆட்டோ டிரைவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.. 3 வருஷமாகவே இப்படி நடந்து வருகிறது.. ஒருநாள் இந்த விஷயம் கார்த்திக்கு தெரிந்துவிட்டது.. இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த "கார்த்தி, நீ எக்கேடாவது கெட்டுப்போ.. என் குழந்தையை என்கிட்ட தந்துடு, நல்லபடியா படிக்க வெச்சிக்கிறேன்" என்று கெஞ்சி உள்ளார்..
மகன்
ஆனால், அபர்ணா மகனை தரவே முடியாது என்று கறாராக சொல்லி உள்ளார். இந்நிலையில்தான் அந்த பயங்கரம் நடந்துள்ளது.. சம்பவத்தன்று அபர்ணாவும் சுரேஷூம் ஒன்றாக இருந்துள்ளனர்.. அப்போது குழந்தை அழுதுள்ளான்.. இதனால் எரிச்சல் அடைந்த சுரேஷ், குழந்தையை தள்ளிவிட்டுள்ளார்..
கொலை
டென்ஷன் அடைந்த அபர்ணா, தன்னுடைய துப்பட்டாவால் குழந்தையின் கழுத்தை இறுக்கி உள்ளார்.. இதில் துடிதுடித்து குழந்தை இறந்துவிட்டான். இதனால் பதறி போன கள்ளஜோடி, சென்னையில் உள்ள கார்த்திக்கு விஷயத்தை போன் செய்து சொல்லி உள்ளனர்.. இதை கேட்டு கதறிய கார்த்திக், போலீசுக்கு சொல்லி உள்ளார்.. போலீசார் அந்த தகவலின்பேரில் விரைந்து வந்தனர்..
டென்ஷன்
சடலத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்க முயல்வதற்குள், கள்ளஜோடியை போலீசார் பிடித்துவிட்டனர்.. 2 பேரும் ஜெயிலில் இருக்கிறார்கள்.. ஆனால், இதில் அபர்ணா ரொம்ப கூலாக இருக்கிறாராம்.. போலீசார் விசாரிக்கும்போதுகூட எந்தவித டென்ஷனும் இல்லாமல் கேஷூவலாக இருந்தாராம்.. அதை பார்த்து போலீசாருக்கே ஷாக் ஆகிவிட்டதாம்..!