நாங்க கமலுடன் கை கோர்க்க வாய்ப்புள்ளது.. சமத்துவ மக்கள் கட்சி தகவல்
Recommended Video

நாகர்கோவில்: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி கூறியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் செய்தியாளர்களிடம் கூறும் போது இத்தகவலைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், சமத்துவ மக்கள் கட்சி தங்களின் பலத்தை தெரிந்து கொள்வதற்காக பாராளுமன்ற தேர்தல் மற்றும் 21 சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் தனித்து போட்டி என்ற நிலைப்பாட்டை எடுத்தோம்.
எங்கள் தலைவர் சரத்குமார் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் நினைக்கின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின்னர் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவோம். அனைத்து கட்சிகளும் சதவிகிதம் பற்றி பேசுகிறது.
எங்களின் சதவிகிதத்தை தெரிந்து கொள்ள இந்த தேர்தல் பயனுள்ளதாக அமையும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் சமத்துவ மக்கள் கட்சியை விரும்புகின்றனர். இந்த தேர்தலில் கடும் போட்டி இருக்கும், கமலஹாசனின் மக்கள் நீதி மையதுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications