நீண்ட இடைவெளிக்குப் பின் பளிச் சூரியன்.. பரவச உதயம்.. குமரியில் சுற்றுலாப் பயணிகள் ஹேப்பி
Recommended Video
நாகர்கோவில்: நீண்ட நாட்களுக்கு பிறகு பிரகாசித்த சூரிய உதயத்தைக் கண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர் சுற்றுலா பயணிகள்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

கன்னியாகுமரியில் ஒரே இடத்திலிருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமத்தை காணமுடியும் என்பதால் இங்கு தினமும் அதிகாலை முதலே சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
கடந்த சில நாட்களாகவே சூரிய உதயம் தெளிவாகத் தெரியவில்லை. மேகமூட்டம் இருந்ததே இதற்குக் காரணம். இந்நிலையில் இன்று அதிகாலையில் சூரிய உதயத்தை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கம பகுதியில் சுற்றுலாப்பயணிகள் கூடினர்.
இன்று நீண்டநாளுக்குப் பிறகு மேகமூட்டம் இல்லாத காரணத்தால் சூரிய உதயம் தெளிவாக தெரிந்தது. இதனை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.
அப்போது அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் அதிகாலையிலேயே கன்னியாகுமரியில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications