தமிழகத்தில் கலவரத்தை தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி.. முதல்வர் ஸ்டாலின் பகிரங்க புகார்
திமுக ஆட்சி சிறப்பாக செயல்படுவதால் கலவரத்தை தூண்டி சிலர் ஆட்சியை அகற்ற முயற்சி செய்வதாக நாகர்கோவிலில் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
நாகர்கோவில்: தமிழ்நாட்டில் சாதி கலவரம், மத கலவரத்தை தூண்ட சதி நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சி சிறப்பாக செயல்படுவதால் கலவரத்தை தூண்டி சிலர் ஆட்சியை அகற்ற சதித்திட்டம் தீட்டுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் ஒழுகினசேரியில் குமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 6.5 அடி உயர பீடத்தில், 8.5 அடி உயரமுள்ள வெண்கலத்தாலான கலைஞரின் முழு உருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர கொடிக்கம்பத்தில் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலூர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், பெரியசாமி, மனோ தங்கராஜ் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

சிலை திறப்புவிழாவிற்கு பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சிலர் நம்மீது புழுதிவாரி தூற்றிக்கொண்டிருக்கின்றனர். திராவிட மாடல் என்று சொல்லி மக்களை கவரக்கூடிய வகையில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்களே.. தொடர்ந்து இந்த ஆட்சியை விட்டால் நம்முடைய பிழைப்பு என்ன ஆவது?என்ற நிலையிலே நம்மீது புழுதி வாரி தூற்றுகிறார்கள்.
இந்த ஆட்சியை எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். எங்காவது சாதி கலவரத்தையோ, மத கலவரத்தையோ ஏற்படுத்தலாமா? மக்களிடையே பிளவுபடுத்தலாமா என்று திட்டமிட்டு காரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
நம்மீது சொல்லப்படுகின்ற தேவையற்ற விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதில்லை. சிலர் தங்களை விளம்பரப்படுத்த அவ்வாறு சொல்கிறார்கள். நான் உங்களை கேட்டுக்கொள்வது நாடாளுமன்ற தேர்தலில் ஒற்றுமையாக இருந்து வென்று காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் சிறப்பான கூட்டணி அமைந்துள்ளது.

நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிராக கூட்டணி கட்சியினர் தங்களின் ஈகோவை விடுத்து ஒன்றாக இணைந்து வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டில் கூட்டணி சிறப்பாக இருக்கிறது. நாட்டைக்காப்பாற்ற எதிர்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் இதன் மூலம் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவை காப்பாற்ற முடியும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த பிரச்சினை தீவிரமடைந்ததை அடுத்து அவர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒற்றுமையை சீர்குலைத்து ஆட்சியை கலைக்க சதி செய்வதாக முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
-
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி












Click it and Unblock the Notifications