நரேந்திர மோடிக்கு எதிராக வேட்புமனு செய்யாதீர்… அய்யாக்கண்ணு பொன். ராதா வேண்டுகோள்
நாகர்கோவில்: வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, அய்யாக்கண்ணு தலைமையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 111 விவசாயிகள், வேட்புமனுத் தாக்கல் செய்வதை, வாபஸ் பெற வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை தலைநகரில் முன்னெடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சமீபத்தில், நடந்த 5 மாநில தேர்தலில் கூட விவசாய கடன்கள் தள்ளுபடி விவகாரம் பாஜகவுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது. அந்தவகையில், நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
இந்த நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன், சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைப்பதியில், இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி வைப்பதும், மாற்றிக் கொள்வதும் சகஜமாக நடப்பது தான் என்றார். இந்த காலகட்டத்தில், கடும் விமர்சன வார்த்தைகளை ஸ்டாலின் சொல்வது ஏற்புடையது இல்லை என்றும் கூறினார்.
மேலும், வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, 111 தமிழக விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்யும் முடிவை, அய்யாக்கண்ணு வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications