பசுமை நிறைந்த நினைவுகளே... 24 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சந்தித்து மகிழ்ந்த மாணவர்கள்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பள்ளியில் 1996 ஆம் ஆண்டு பயின்ற மாணவ மாணவிகள் 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் சந்தித்து தங்கள் நட்பை வளர்த்து கொண்டனர்.
கடல் கடந்து வந்து தங்களது பழைய நட்பை வளர்த்த மாணவ மாணவிகள் தங்களை உயர்ந்த நிலைக்கு ஆளாக்கிய தங்கள் ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றதோடு தங்கள் குடும்பத்தினரையும் அறிமுகப்படுத்தி வைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

படித்ததோடு ஆசிரியர்களை மறந்து விடும் மாணவர்கள் மத்தியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் வாழ்த்து பெற்ற மாணவ மாணவிகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணபதி புரம் கிராமத்தில் அமைந்துள்ளது அன்ன விநாயகர் அரசு மேல்நிலை பள்ளி, இந்த பள்ளியில் கடந்த 1996 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் சந்தித்து தங்கள் நட்பை வளர்த்து கொண்டனர்.

கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் நண்பர்களை தொடர்பு கொண்ட மாணவ மாணவிகள் தங்கள் அனைவரும் கடைசியாக படித்து பிரிந்து சென்ற அதே வகுப்பறையில் ஒன்று சேர வேண்டும் என திட்டமிட்டனர். இதற்காக ஒரு நாள் குறிக்கப்பட்டு இன்று அனைவரும் ஒரே இடத்தில் சந்தித்தனர்.
24 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்த தங்கள் நண்பர்கள் அவர்களது குடும்பத்தினர் குழந்தைகளை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தினார். மேலும் தங்களுக்கு பாடம் கற்று கொடுத்து தங்களை உயர்ந்த நிலைக்கு ஆளாக்கிய ஆசிரியர்களுக்கு மலர்கள் கொடுத்து வரவேற்ற மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இது தங்கள் வாழ்வில் மிகப்பெரிய அனுபவம் என தெரிவித்த மாணவ மாணவிகள் தங்கள் நண்பர்களையும் ஆசிரியர்களையும் மீண்டும் சந்திப்போமா என்பது கணவாகவே இருந்தது. இன்று அந்த கனவு நனவாகி இருப்பதாகவும் இந்த விழாவில் ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஆசிர்வதித்தது தங்களை மேலும் முன்னேற்றும் என தெரிவித்தனர்.
படித்ததோடு ஆசிரியர்களை மறந்து விடும் மாணவர்கள் மத்தியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் வாழ்த்து பெற்ற மாணவ மாணவிகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.












Click it and Unblock the Notifications