நாகர்கோவிலில் சுதந்திர தின விழா.. கோலாகல கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: இந்தியாவின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

26 பயனாளிகளுக்கு 12 லட்சத்தி 33 ஆயிரத்து 52 ரூபாய் மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாடு முழுவதும் 73 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

Independence day celebrated in Nagercoil

அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

Independence day celebrated in Nagercoil

பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் விழாவிற்கு மெருகேற்றியது. விழாவில் குமரி மாவட்டத்தில் அரசு பணிகளில் சிறப்பாக பணி புரிந்த 50 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, 26 பயனாளிகளுக்கு 12 லட்சத்தி 33 ஆயிரத்தி 052 ரூபாய் மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கினார்.

Independence day celebrated in Nagercoil

விழாவில் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத், உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், மாணவ மாணவியர்கள், ஆசரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+