அதிர வைக்கும் ஆபாச வீடியோக்கள்.. சரமாரி பெண் தொடர்பு.. சிபிசிஐடி வசம் நாகர்கோவில் காசி வழக்கு!
நாகர்கோவில் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
நாகர்கோவில்: யார் அந்த நடிகை மகள், வீடியோவில் காசியுடன் நெருக்கமாக இருந்த விஐபி மனைவி யார், நாகர்கோயில் காசிக்கு உதவிய புள்ளிகள் யார் யார் போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.. காரணம், காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் காசியின் வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது.
Recommended Video
நாகர்கோவில் காசி சிறுமிகள் முதல் குடும்ப பெண்கள் வரை எல்லாரையுமே சீரழித்துள்ளார்.. இது சம்பந்தமான நிர்வாண போட்டோக்கள், ஆபாச வீடியோக்கள் காசியின் லேப்டாப்பில் சிக்கியது.. அதை அடிப்படையாக வைத்துதான் விசாரணை நடந்து வருகிறது.

ஆபாச வீடியோக்களை ஆய்வு செய்தபோதே விஐபிகள், அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. இத்தனை பெண்களை நாசம் செய்து, கோடிக்கணக்கில் பணத்தை மிரட்டி பறித்துள்ளார் என்றால் நிச்சயம் பின்புலம் இல்லாமல் செய்திருக்க முடியாது என்று முதலில் இருந்தே நம்பப்பட்டு வந்தது.
பாதிக்கப்பட்டவர்களும், குடும்ப மானம் வெளியாகி கேவலப்பட்டுவிடுவோம் என்பதால் இதுவரை புகார் தராமல் உள்ளனர். ஏற்கனவே ஒருமுறை போலீஸ் காவலில் காசியிடம் விசாரணை நடந்தது.. எந்த தகவலும் பெரிதாக வரவில்லை.. ஆபாச வீடியோவை அப்லோடு செய்யும் ஜினோ என்ற நண்பனை பற்றி மட்டும்தான் விஷயம் வந்தது.
இந்த சமயத்தில்தான் சிறுமி ஒருவரும் காசி மீது புகார் தந்தார்.. இந்த சிறுமியை இரண்டரை வருஷமாகவே காசி காதலிப்பது போல நடித்து சீரழித்து வந்துள்ளார்.. அந்த சிறுமியிடம் பணம் பறிக்க முயல்வதற்குள்தான் போலீசில் சிக்கி கொண்டார். அதனால் இவர் யார் யாரை ஏமாற்றி பணம் பறித்தால் என்பதை விசாரிக்க திரும்பவும் 6 நாள் விசாரணை நடந்து வருகிறது.
இதில் பெரிய பெரிய புள்ளிகள், அரசியல் பிரமுகர்கள், விஐபிக்கள் என பலரும் சம்பந்தப்பட்டிருப்பதால், அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டியிருக்கும் என போலீஸ் தயக்கம் காட்டுவதாக ஒருசிலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.. அதனால் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி, சிபிஐக்கு மாற்றினால் பல தகவல்கள் கிடைக்கலாம் என சமூக ஆர்வலர்களும் கூறியபடியே இருந்தனர்.
முதலில் காசி ஏமாற்றியது வெறும் தமிழகத்தில் மட்டும்தான் என்று யூகிக்கப்பட்டது.. பிறகுதான் இவர் பெங்களூரு, பாண்டிச்சேரி என பிற மாநிலங்களிலும் வேலையை காட்டியதால், சிபிஐ விசாரணை தேவை என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
இதை அதிகமாக வலியுறுத்தி வருவது மாதர் சங்கத்தினர்தான்... "காசியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியே ஆகவேண்டும்" என்கிறார்கள். இந்நிலையில் தற்போது காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதனால் வழக்கு சூடு பிடித்துள்ளது.. இனி காசி அவ்வளவு எளிதாக போலீஸ் பிடியில் இருந்து தப்பிவிட முடியாது என்றும் தெரிகிறது.. அதேசமயம் அந்த நடிகை மகள் யார், விஐபி மனைவி யார், காசிக்கு உதவும் அரசியல் புள்ளிகள் யார், யார் என்ற அனைத்து விவரங்களும் வெளிவந்துவிடும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications