மனைவி போயிட்டாளே.. கதறி துடித்த கணவன்.. ப்பா என்னா ஆக்டிங்! பரோட்டா மாஸ்டரை "பார்சல்" பண்ணிய போலீஸ்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய கணவரை போலீசாரை கைது செய்தனர்.
நாகர்கோவிலில் பரோட்டோ கடை நடத்தி வந்து இருக்கிறார் முகமது உசைன். இவருக்கும் நாகர்கோவிலை சேர்ந்த ரெஜினா பானு என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது,.
திருமணம் நடந்த தொடக்கத்தில் இவர்கள் சந்தோசமாக வாழ்ந்து இருக்கின்றனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர்களிடையே சண்டை அதிகம் ஆகி உள்ளது.

சண்டை
முக்கியமாக இவர்களுக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. பரோட்டா மாஸ்டராக இருக்கும் உசைன் கடையை மூடிவிட்டு இரவில் வந்து ரெஜினாவை தினமும் அடிப்பதை வழக்கமாக வைத்து இருந்துள்ளார். சமயங்களில் குடித்துவிட்டு அடிப்பதையும் வழக்கமாக வைத்து இருந்தார். ரெஜினா இது தொடர்பாக தனது பெற்றோரிடம் அவ்வப்போது புகார் அளித்துள்ளார்.

பெற்றோர்
ஆனால் பெற்றோரோ, அதெல்லாம் சரியாகிவிடும். கவலைப்பட வேண்டாம். அவர் நல்ல மனுஷன். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று அறிவுரை வழங்கி உள்ளனர். இந்த விவகாரத்தில் ரெஜினாவிற்கு ஆதரவாக யாரும் இல்லை. இந்த நிலையில்தான் நேற்று காலை திடீரென உசைன் ஆம்புலன்சுக்கு கால் செய்து உள்ளார். என்னுடைய மனைவி தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை என்று கால் செய்து கூறி உள்ளார்.

ஆம்புலன்ஸ்
இதையடுத்து உடனடியாக ரெஜினாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், ரெஜினா தூங்கும் முன் நெஞ்சு வலிக்கிறது என்று கூறினார். சாப்பாடு செரிக்காமல் அப்படி இருக்கலாம் என்பதால் விட்டுவிட்டேன். ஆனால் காலையில் உயிருடன் இல்லை. அதனால் ஆம்புலன்சுக்கு போன் செய்தேன் என்று உசைன் கூறி உள்ளார். அதோடு என் மனைவி போயிட்டாளே என்று கூறி கண்ணீர்விட்டு அழுது இருக்கிறார்.

பிரேத பரிசோதனை
ஆனால் மருத்துவர்கள் ரிப்போர்ட்படி அவரின் உடலில் எந்த விதமான குறைபாடும் இல்லை. எந்த நோய் பாதிப்பும் இல்லை. அதோடு கழுத்து இறுக்கமாக நெரிக்கப்பட்டு அடையாளங்கள் இருந்துள்ளன,. மூச்சு விட முடியாமல் அந்த பெண் இறந்ததாக அறிக்கை கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஒருவழியாக மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார் உசைன். மனைவி நடத்தை மீது சந்தேகம் இருந்ததால் அவரை கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் உசைன்.












Click it and Unblock the Notifications