"பாசி அல்வா" கொடுத்த திமுகவை தெரியாதா.. வேட்புமனு தாக்கல் செய்த கையோடு.. பொங்கிய பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Recommended Video
முன்னதாக காமராஜர் ,எம்ஜிஆர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நாகர்கோவில் பாஜக அலுவலகத்திலிருந்து தொண்டர்களுடன் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஊர்வலமாக வந்து நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அரவிந்திடம் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கடல் பாசி அல்வா
நிருபர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, 1967 ஆம் ஆண்டு கடல் பாசியில் அல்வா செய்து தரப்படும் என்று திமுக ஆட்சியில் வாக்குறுதி அளித்துவிட்டு பொதுமக்களுக்கு அல்வா கொடுத்தார்கள்.

திட்டங்கள் நிறைவேறும்
ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் வாக்குறுதி அளித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான மக்களின் ஆதரவுடன் திட்டங்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிமுக கூட்டணி
அ.தி.மு.க. கூட்டணியில் நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு சட்டசபை தொகுதிகள் பாரதிய ஜனதாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கிள்ளியூர் தொகுதியில் த.மா.கா.வும், கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க.வும் போட்டியிடுகிறது.

லோக்சபா இடைத் தேர்தல்
கன்னியாகுமரி லோக்சபா இடைத் தேர்தலுக்காக, பா.ஜ.க வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் முதலில் அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய் வசந்த் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். எனவே, இருமுனைப் போட்டியாக, நேருக்கு நேர் மோதல் அங்கு உள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications