நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. ஆசிரியருக்கு தர்மஅடி

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: நாகர்கோவிலில் வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை வகுப்பறை யில் பாலியல் தொந்தரவு செய்ததாக ஆசிரியர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

teacher beaten by parents for teasing school girl

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் தற்காலிய ஆசிரியரான சுரேஷ் என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

நடுக்காட்டில் எலும்புகூடு.. மண்டை ஓடு.. தலைமுடி.. புடவை.. சிக்கிய கொத்தனார்.. செல்விக்கு நேர்ந்த கதிநடுக்காட்டில் எலும்புகூடு.. மண்டை ஓடு.. தலைமுடி.. புடவை.. சிக்கிய கொத்தனார்.. செல்விக்கு நேர்ந்த கதி

இது குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததால் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு அந்த ஆசிரியரை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லும் போதும் அப்பகுதி மக்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

இதனால் அப்பகுதியில் பரப்பு ஏற்பட்டது அவரிடம் நாகர்கோவில் கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் குறித்து இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

English summary
A Govt school Teacher was beaten by parents for teasing school girl in class room.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X