வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின்.. ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
நாகை; புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது.
Recommended Video
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பசலிக்கா அந்தஸ்து பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை ஆண்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அதன்படி வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 4.30 மணிக்கு கீழ்க்கோயில் முகப்பிலிருந்து கொடி ஊர்வல பேரணி தொடங்கியது.
கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவில் கலந்துகொள்ளப் பக்தர்களுக்குத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல அனைத்து வழிபாடுகளும் பூட்டப்பட்ட பேராலயத்துக்குள் நடைபெறும் என்று பேராலய நிர்வாகம் சார்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, இந்த பெருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். குறிப்பாகச் செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறும் தேர்ப்பவனி நிகழ்ச்சியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இருப்பினும், கொரோனா பாதிப்பால் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், 19 இடங்களில் போலீசார் இரும்பு தடுப்பு அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications