ராசிபுரத்தில் குழந்தைகளை விற்று, லட்சக்கணக்கில் சம்பாத்தியம்... 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிக்கினார்
Recommended Video
நாமக்கல்: ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், தவறான உறவில் பிறந்த குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு, சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டார். பணத்திற்கு குழந்தைகளை விற்கும் ஓய்வு பெற்ற செவிலியரின் ஆடியோ வெளியானதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகளின் அழகான தோற்றம், கலர் ஆகியவற்றை வைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. ஆண் குழந்தைகளை 4 லட்ச ரூபாய்க்கும், பெண் குழந்தைகளை 3 லட்ச ரூபாய்க்கும் விற்பதாக கூறப்படுகிறது.

ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் செவிலியர் பர்வின் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் இன்று கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, குழந்தை கடத்தல் விவகாரத்தில் இன்னும் பலர் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என சந்தேகம் தெரிவித்துள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், 3 குழந்தைகளை ஓமலூர் மற்றும் கொல்லிமலையில் விற்பனை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டனர் என்று கூறினார்.

-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications