ராசிபுரத்தில் குழந்தைகளை விற்று, லட்சக்கணக்கில் சம்பாத்தியம்... 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிக்கினார்
Recommended Video
நாமக்கல்: ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், தவறான உறவில் பிறந்த குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு, சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டார். பணத்திற்கு குழந்தைகளை விற்கும் ஓய்வு பெற்ற செவிலியரின் ஆடியோ வெளியானதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகளின் அழகான தோற்றம், கலர் ஆகியவற்றை வைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. ஆண் குழந்தைகளை 4 லட்ச ரூபாய்க்கும், பெண் குழந்தைகளை 3 லட்ச ரூபாய்க்கும் விற்பதாக கூறப்படுகிறது.

ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் செவிலியர் பர்வின் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் இன்று கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, குழந்தை கடத்தல் விவகாரத்தில் இன்னும் பலர் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என சந்தேகம் தெரிவித்துள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், 3 குழந்தைகளை ஓமலூர் மற்றும் கொல்லிமலையில் விற்பனை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டனர் என்று கூறினார்.

-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications