"மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: லேக்சபா தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் அமைச்சர் மதிவேந்தன் பேசிக் கொண்டு இருக்கும் போதே திடீரென பெண் ஒருவர் எழுந்து தனக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்று முறையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கே தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.

A Woman stopped Minister mathiventhan and asked for Magalir Urimai Thogai

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. இதனால் பிரச்சாரம் இப்போதே தீவிரமடைந்து இருக்கிறது.

நாமக்கல்: அதன்படி நாமக்கல் தொகுதி இந்த முறை திமுக கூட்டணியில் உள்ள கொமதேகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே கொமதேக சார்பில் மாதேஷ்வரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொமதேக வேட்பாளர் மாதேஷ்வரனுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. அதன்படி வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென எழுந்த பெண் ஒருவர் தனக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்று நேரடியாக அமைச்சரிடம் முறையிட்டார். அப்போது அருகே இருந்தவர்கள், "அமைச்சர் பேசுகிறாரேம்மா.. போய் உட்காருங்க.. பேசி முடிச்சதும் கேட்பாரு" என்று சொல்லி அந்த பெண்ணை அமர வைத்தனர்.

முறையிட்ட பெண்: அமைச்சர் மதிவேந்தனும் சொன்னபடியே தனது பேச்சை முடித்தவுடன் அந்த பெண்ணை அழைத்து என்ன பிரச்சினை எனக் கேட்டார். மகளிர் உரிமை தொகையைப் பெறுவதில் தனக்குப் பிரச்சினை இருப்பதாக அந்தப் பெண் தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக மேடையில் இருந்தபடியே அதிகாரிகளுக்கு போன் போட்ட அமைச்சர் மதிவேந்தன், "மகளிர் உரிமை தொகை பதிவு பண்ணும் போது பிரச்சினை வந்ததாம். அது என்னனு பாருங்க.

தேர்தல் முடிந்த பிறகு அது என்ன விவகாரம் எனப் பார்த்து நடவடிக்கை எடுங்கள்.. நான் அந்த பெண்ணை அலுவலகத்திற்கு வரச் சொல்கிறேன். என்ன பண்ண முடியும்னு பாருங்க" என்று அவர் அறிவுறுத்தினார். பிறகு அந்த பெண்ணிடம் தேர்தல் முடிந்தவுடன் நிச்சயம் இந்த விவகாரத்தில் தீர்வு கிடைக்கும் என்று சொல்லி அந்த பெண்ணை அனுப்பி வைத்தார். இது தொடர்பாக வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

மகளிர் உரிமை தொகை: பெண்களுக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை கடந்தாண்டு திமுக அரசு கொண்டு வந்தது. குறிப்பிட்ட சில நிபந்தனைகளை விதித்த தமிழ்நாடு அரசு, அவர்களுக்கு மட்டுமே மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தது. இருப்பினும், சில பெண்கள் தங்களுக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை என்று தொடர்ந்து புகார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் லோக்சபா தொகுதியைப் பொறுத்தவரைக் கடந்த முறை திமுகவின் சின்ராசு என்பவர் வெற்றி பெற்று இருந்தார். இந்த முறை அங்கே உதயசூரியன் சின்னத்தில் கொமதேகவின் மாதேஷ்வரன் போட்டியிடுகிறார். அங்கே அதிமுக சார்பில் தமிழ் மணி போட்டியிடும் நிலையில், பாஜகவில் இருந்து கேபி ராமலிங்கம், நாம் தமிழர் கட்சியில் கனிமொழி ஆகியோர் களமிறங்குகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+