இந்த உருட்டுற வேலை எல்லாம் எங்ககிட்ட வேணாம்.. பட்டுனு ஆதாரத்த சொல்லணும்: அண்ணாமலைக்கு ஈஸ்வரன் பதிலடி
நாமக்கல்: இந்த உருட்டுற வேலை எல்லாம் எங்கக்கிட்ட வேண்டாம். கேட்கும் கேள்விக்கு மட்டும் நேரடியாகப் பதில் சொல்லுங்க என அண்ணாமலைக்கு சவால் விட்டுள்ளார் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏவுமான ஈஸ்வரன்.
பாஜவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்செங்கோட்டில் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்ட போது, திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ ஈஸ்வரனை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். சட்டமன்றத்தில் அமைச்சர் உதயநிதிக்கு துதிபாடும் வேலையைத் தான் செய்கிறார் ஈஸ்வரன். தனியாக கட்சி நடத்துவதற்குப் பதிலாக அவர் திமுகவிலேயே இணைந்து விடலாம் என விமர்சித்தார் அண்ணாமலை.

அண்ணாமலைக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏவுமான ஈஸ்வரன் பதிலடி கொடுத்திருந்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதாரத்துடன் பேச வேண்டும். இரண்டரை ஆண்டு காலத்தில் சட்டமன்றத்தில் நான் உதயநிதி பற்றி பேசியிருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என சவால் விடுத்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஈஸ்வரன், "அருமைத்தம்பி அண்ணாமலை அவர்களே.. இந்த உருட்டுற வேலை எல்லாம் எங்கக்கிட்ட வேண்டாம். கேட்கும் கேள்விக்கு மட்டும் நேரடியாகப் பதில் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு மடைமாற்றும் பேச்சுகளை எல்லாம் வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அமைச்சர் உதயநிதிக்கு துதிபாடும் வேலையைத் தான் ஈஸ்வரன் செய்கிறார் என திருச்செங்கோட்டில் பேசி இருக்கிறீர்கள். அதற்கு நான் மறுப்பு தெரிவித்துள்ளேன். நீங்கள் சொன்னது உண்மை என நிரூபிக்க முடியும் என்றால் அதற்கான ஆதாரங்கள் கொடுங்கள். அதை விட்டுவிட்டு மற்ற இடங்களைப் போல உருட்டும் வேலை வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, "எனது செயல்பாடு பற்றி பேசுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஆனால், ஏதோ குறை சொல்ல வேண்டும் என்றே பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனது தொகுதிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பயனளிக்கும் வகையில் சட்டமன்றத்தில் நான் பேசியுள்ளேன். இந்த விவகாரத்தில் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க அண்ணாமலை தயாரா? எங்கே எப்போது என ஊடகங்கள் முன்னிலையில் அண்ணாமலை சொல்ல வேண்டும்.
கடந்த 30 மாதங்களில் பலமுறை நான் சட்டமன்றத்திலே பேசியிருக்கிறேன். சட்டமன்ற உரை என்பது மேடைப்பேச்சு போல் அல்ல. பேசிய எல்லாவற்றையும் ஒரு வார்த்தை விடாமல் ஆவணப்படுத்தப்பட்டு சட்டமன்ற நூலகத்தில் இருக்கிறது. அதை எப்போது வேண்டுமென்றாலும் படிக்க முடியும். நான் உதயநிதி பற்றி சட்டசபையில் புகழ்ந்து பேசியதாக அண்ணாமலையால் நிரூபிக்க முடியுமா? இல்லையென்றால் நான் பேசியது தவறு என அண்ணாமலை ஒப்புக் கொள்ள வேண்டும்" என சவால் விட்டிருந்தார் ஈஸ்வரன்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications