இந்த உருட்டுற வேலை எல்லாம் எங்ககிட்ட வேணாம்.. பட்டுனு ஆதாரத்த சொல்லணும்: அண்ணாமலைக்கு ஈஸ்வரன் பதிலடி
நாமக்கல்: இந்த உருட்டுற வேலை எல்லாம் எங்கக்கிட்ட வேண்டாம். கேட்கும் கேள்விக்கு மட்டும் நேரடியாகப் பதில் சொல்லுங்க என அண்ணாமலைக்கு சவால் விட்டுள்ளார் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏவுமான ஈஸ்வரன்.
பாஜவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்செங்கோட்டில் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்ட போது, திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ ஈஸ்வரனை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். சட்டமன்றத்தில் அமைச்சர் உதயநிதிக்கு துதிபாடும் வேலையைத் தான் செய்கிறார் ஈஸ்வரன். தனியாக கட்சி நடத்துவதற்குப் பதிலாக அவர் திமுகவிலேயே இணைந்து விடலாம் என விமர்சித்தார் அண்ணாமலை.

அண்ணாமலைக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏவுமான ஈஸ்வரன் பதிலடி கொடுத்திருந்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதாரத்துடன் பேச வேண்டும். இரண்டரை ஆண்டு காலத்தில் சட்டமன்றத்தில் நான் உதயநிதி பற்றி பேசியிருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என சவால் விடுத்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஈஸ்வரன், "அருமைத்தம்பி அண்ணாமலை அவர்களே.. இந்த உருட்டுற வேலை எல்லாம் எங்கக்கிட்ட வேண்டாம். கேட்கும் கேள்விக்கு மட்டும் நேரடியாகப் பதில் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு மடைமாற்றும் பேச்சுகளை எல்லாம் வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அமைச்சர் உதயநிதிக்கு துதிபாடும் வேலையைத் தான் ஈஸ்வரன் செய்கிறார் என திருச்செங்கோட்டில் பேசி இருக்கிறீர்கள். அதற்கு நான் மறுப்பு தெரிவித்துள்ளேன். நீங்கள் சொன்னது உண்மை என நிரூபிக்க முடியும் என்றால் அதற்கான ஆதாரங்கள் கொடுங்கள். அதை விட்டுவிட்டு மற்ற இடங்களைப் போல உருட்டும் வேலை வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, "எனது செயல்பாடு பற்றி பேசுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஆனால், ஏதோ குறை சொல்ல வேண்டும் என்றே பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனது தொகுதிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பயனளிக்கும் வகையில் சட்டமன்றத்தில் நான் பேசியுள்ளேன். இந்த விவகாரத்தில் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க அண்ணாமலை தயாரா? எங்கே எப்போது என ஊடகங்கள் முன்னிலையில் அண்ணாமலை சொல்ல வேண்டும்.
கடந்த 30 மாதங்களில் பலமுறை நான் சட்டமன்றத்திலே பேசியிருக்கிறேன். சட்டமன்ற உரை என்பது மேடைப்பேச்சு போல் அல்ல. பேசிய எல்லாவற்றையும் ஒரு வார்த்தை விடாமல் ஆவணப்படுத்தப்பட்டு சட்டமன்ற நூலகத்தில் இருக்கிறது. அதை எப்போது வேண்டுமென்றாலும் படிக்க முடியும். நான் உதயநிதி பற்றி சட்டசபையில் புகழ்ந்து பேசியதாக அண்ணாமலையால் நிரூபிக்க முடியுமா? இல்லையென்றால் நான் பேசியது தவறு என அண்ணாமலை ஒப்புக் கொள்ள வேண்டும்" என சவால் விட்டிருந்தார் ஈஸ்வரன்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications