நாமக்கல்லில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி! ரூ 20 லட்சம் இழப்பீடு!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் ரோகித், அங்குள்ள பாதாள சாக்கடையில் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 4ஆவது வார்டு பகுதி சின்னமுதலைபட்டி. இங்கு கடக்கால் வீதி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ரோகித் (4). புத்தாண்டு தினமான நேற்று ரோகித், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கே புதிதாக பாதாள சாக்கடைக்காக அமைத்த 5 அடி குழியில் நிரூற்று மூலம் தண்ணீர் நிரம்பியிருந்தது. விளையாடிக் கொண்டே சென்ற ரோகித், அந்த குழியில் விழுந்து நீரில் மூழ்கினான்.
இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாமல் அக்கம்பக்கத்தில் பெற்றோர் தேடினர். அப்போது அவர்கள் வீட்டருகே குழந்தை இறந்த நிலையில் மிதந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அப்போது குழந்தையை கட்டி பிடித்து பெற்றோர் அழுதது காண்போரை கலங்கச் செய்தது. இந்த குழியை குஜராத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் தோண்டியது தெரியவந்தது. குழியை தோண்டிய நிலையில் அதை சுற்றி எந்த பாதுகாப்பு அம்சங்களும் செய்யப்படாதது குறித்து அப்பகுதியினர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் அந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். இது குறித்து போராட்டம் நடத்திய நிலையில் போலீஸாரும் மாநகராட்சி அதிகாரிகளும் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, குழந்தையின் இழப்புக்கு ரூ 20 லட்சம் இழப்பீடு அளித்தனர்.
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications