Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாமக்கல்லில் சரிந்த ஆடுகள்.. சந்தைக்கு வந்த "செம்பு கிடா, சண்ட கிடா".. இது கார்த்திகை விரதம் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: கார்த்திகை மாதம் துவங்கி நடந்து வரும் நிலையில், பெரும்பாலான பக்தர்கள், விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்ல துவங்கியிருக்கிறார்கள்.. இதையடுத்து, இறைச்சி விற்பனை மந்தமாகியிருக்கிறதாம். குறிப்பாக, ஆட்டுச்சந்தைகளில் வியாபாரம் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் மீன் மார்க்கெட்டுகள் வியாபாரமின்றி காணப்படும்.. தமிழகத்தில் பெரும்பாலானோர் அசைவம் தவிர்த்து, சைவம் மட்டுமே இந்த புரட்டாசியில் சாப்பிடுவார்கள். இந்த ஒரு மாதத்துக்கு இறைச்சியை சாப்பிடாத காரணத்தினால், சிக்கன், மட்டன், மீன் விலை குறைந்து காணப்படும்.

namakkal goat prices

அசைவ பிரியர்கள்: இதனால் அசைவ பிரியர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், இறைச்சி வியாபாரிகளுக்கு பெரிதாக லாபம் கிடைப்பதில்லை... புரட்டாசியை போலவே, கார்த்திகை மாதத்திலும் பலர் அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள்..

கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்ப சுவாமியை வேண்டி மண்டல பூஜைக்காக மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவது வழக்கமாகும்.. அந்தவகையில், ஐயப்ப பக்தர்கள் கோவிலில், மாலை அணிவித்து இந்த மாதம் விரதத்தை தொடங்கியிருக்கிறார்கள்.. விரதம் நாட்களில் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவதால், ஆடுகள் விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆட்டுச்சந்தைகள்: கார்த்திகை மாதம் காரணமாக மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை சரிவை எட்டியிருக்கிறதாம்.. வழக்கத்தை விட குறைவான ஆடுகளே சந்தைக்கு வந்திருந்தது.

தென்மாவட்டங்களிலேயே புகழ்பெற்ற ஆட்டுசந்தைகள் என்றால், அவைகள் எட்டயபுரம் மற்றும் மேலப்பாளையம் சந்தைகளாகும்.. இந்த சந்தைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்து வியாபாரிகள் வருவது வழக்கமாகும்.. செவ்வாய்க்கிழமைகளில் மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் ஆயிரக்கணக்கில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படும்... அதேபோல. மாடுகள், கோழிகள், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் தனித்தனி இடங்களில் நடப்பது வழக்கமாகும்.

கார்த்திகை மாதம்: ஆனால், கார்த்திகை மாதம் நடந்துவருவதால், சந்தையில் ஆடுகள் விற்பனை சரிந்துவிட்டதாம்.. செம்பு கிடா, சண்ட கிடா என பல வகையான ஆடுகள் கொண்டு வரப்பட்ட நிலையில், இறைச்சிக்கான ஆடுகள் மட்டுமே ஓரளவுக்கு விற்பனை ஆகியிருக்கிறது.. சிலர் மட்டும் குட்டி ஆடுகளை வளர்ப்பதற்காக வாங்கி சென்றிருக்கிறார்கள்.

மற்றபடி எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என்று கவலையுடன் சொல்கிறார்கள் வியாபாரிகள்.. இந்த கார்த்திகை மாதத்தில் கோயில் கொடைகளும் அவ்வளவாக நடப்பதில்லை என்பதால், ஆடுகள் விற்பனை குறைந்துவிட்டதாம்..

நாமக்கல் சந்தை: அதேபோல, நாமக்கல் கொளத்தூர் சந்தையிலும் ஆடுகள் விற்பனை குறைந்துள்ளது.. தீபாவளி முடிந்ததில் இருந்தே ஆடுகள் விலை சரியத்தொடங்கிவிட்டதாம்.. ஆடுகள், 500 முதல், 1,000 ரூபாய் வரை விலை சரிந்துவிட்ட நிலையில், கார்த்திகை, மார்கழியில் ஆடுகள் விலை குறைவாகவே இருக்கும் என்றும் தை இரண்டாம் வாரத்துக்கு பிறகே விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கால்நடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+