மின்வாரியத்தில் வேலை... இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுக்காதீர்... அமைச்சர் எச்சரிக்கை
நாமக்கல்: மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி இடைத்தரகர்கள் பணம் கேட்டால், அதை நம்பி கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளார் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி.
மேலும், கேங் மேன் பணிக்கு இப்போது ஆட்கள் தேர்வு நடைபெறுவதால், இடைத்தரகர்கள் யாராவது வேலை வாங்கித் தருகிறேன் என அணுகினால் அதனை மக்கள் நம்பக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
மின் வாரிய பணிகளுக்கு முழுக்க, முழுக்க உடற்தகுதியின் அடிப்படையிலேயே ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டுள்ளார்.

கேங் மேன் வேலை
மின்சாரத்துறையில் கேங் மேன் பணிக்கு தமிழகம் முழுவதும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். மொத்தமுள்ள 50 ஆயிரம் பணியிடங்களுக்கு 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஏமாற்று வேலை
இதனை சாதகமாக பயன்படுத்தும் இடைத்தரகர்கள் சிலர் அமைச்சரை தெரியும், அதிகாரிகளை தெரியும் எனக் கூறி கிராமப்பகுதிகளில் கேங் மேன் பணிக்கு விண்ணப்பித்திருந்தவர்களின் பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணியிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் வினவினர்.

நம்ப வேண்டாம்
மின்வாரியத்தில் கேங் மேன் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும், முழுக்க முழுக்க உடற்தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாகவும் கூறினார். மேலும், இடைத்தரகர்களை நம்பி யாரும் அரசு வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

சாதனைகள்
மேலும், அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கமணி உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக எப்போதும் தயாராக தான் உள்ளது என்றும், தமிழக அரசு செய்த சாதனைகளை கூறி வாக்குகள் கேட்போம் எனவும் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications