ராசிபுரத்தில் பகீர் கிளப்பிய குழந்தை கடத்தல் விவகாரம்.. கைதான அமுதா உள்பட 5 பேருக்கு ஜாமீன் மறுப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவது தொடர்பாக கைதான 5 பேரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராசிபுரத்தில் குழந்தை விற்பனை குறித்து ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா பேசிய ஆடியோ பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து அமுதா, கணவர் ராமச்சந்திரன், குழந்தை கடத்தல் புரோக்கர்கள் செல்வி, லீலா, பர்வீன், ஹசீனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுவரை எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளன என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தையை வாங்கும் தம்பதிக்கே அக்குழந்தை பிறந்ததாக சான்றிதழையும் அமுதா உள்ளிட்டோர் பெற்று தந்துள்ளதால் பிறப்பு சான்றிதழ் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அமுதா, கணவர் ராமச்சந்திரன், லீலா, பர்வீன், ஹசீனா ஆகியோர் ஜாமீன் கோரி நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அவர்களது ஜாமீன் மனுக்கள் மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது.
அவர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications