உயிரையே பறித்த ஒரு நாள் வேலை.. சாவு இப்படியா வரனும்.. பெக்லைனோடு.. கோயில் கிணற்றில் சோகம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோவில் அருகே உள்ள ஊர் கிணற்று பக்கவாட்டு பகுதியை பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தப்படுத்திய டிரைவர், எதிர்பாராதவிதமாக பொக்லைனுடன் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி 8-வது வார்டு மாங்குட்டை பாளையத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக இந்த கோவில் அருகே உள்ள ஊர் கிணற்று பக்கவாட்டு பகுதியை பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணி நடந்து வந்தது.

இந்த சுத்தப்படுத்தும் பணியினை கைலாசம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் மூர்த்தி (வயது 35) என்பவர் செய்து வந்தார். டிரைவர் மூர்த்தி பொக்லைன் எந்திரம் மூலம் கிணற்றை ஒட்டிய பகுதியில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பொக்லைன் எந்திரம் அருகே இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
இதில் டிரைவர் மூர்த்தி வெளியே வர முடியாமல் பொக்லைன் எந்திரத்துக்குள் சிக்கி சில நிமிடங்களில் இறந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். போலீசாரும் சம்பவம் குறித்து கேள்விப்பட்டு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மூர்த்தியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூர்த்தியின் உடல் மீட்கப்பட்டது.
அதன்பின்னர் கிரேன் உதவியுடன் பொக்லைன் எந்திரத்தையும் தீயணைப்பு வீரர்கள் வெளியே கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து திருச்செங்கோடு டவுன் போலீசார், மூர்த்தியின் உடலை கைப்பற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களாக கிணற்றை சுத்தப்படுத்தும் பணியில் இருந்தவர்கள் விடுமுறையில் சென்றுவிட்டார். தற்காலிகமாக டிரைவர் மூர்த்தி வேலைக்கு வந்துள்ளார். வந்த இடத்தில் விபத்தில் சிக்கி இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். கோயில் அருகே கிணற்றை சுத்தப்படுத்தும் போது டிரைவர் இறந்த சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications