சிறையை காட்டி பாஜகவை அச்சுறுத்த முடியாது.. தொண்டர்கள் மீது கைவைத்தால் தக்க பதிலடி.. கேபி ராமலிங்கம்!
நாமக்கல்: தமிழக அரசு சிறையை காட்டி பாஜக-வை அச்சுறுத்த முடியாது என்று சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாதா ஆலயத்தின் பூட்டை உடைத்து நுழைந்ததாக பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகஸ்ட் 14ம் தேதி ராசிபுரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து மருத்துவ சிகிச்சைக்கு பின் சேலம் மத்திய சிறையில் இருந்த அவருக்கு, புதன்கிழமை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பின்னர் திராளான தொண்டர்களுடன் சேலத்தில் இருந்து வாகனங்கள் பின் தொடர ராசிபுரம் வந்தார். ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த பாரதமாதா உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கேபி ராமலிங்கம் பேட்டி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கேபி ராமலிங்கம் கூறுகையில், நாட்டில் 75வது சுதந்திர தினவிழாவையொட்டி தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு பாஜக சார்பில் நடந்தது. அப்போது பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா எழுப்பிய பாரதமாதா ஆலயத்தில் மரியாதை செலுத்த சென்றோம்.

குற்றச்சாட்டு
ஆனால் மரியாதை செலுத்த அனுமதியளித்துவிட்டு, காவல்துறையினர் ஆலயத்தை பூட்டிவைத்துவிட்டார்கள். அதனால் பூட்டை அப்புறப்படுத்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். இதற்காக வழக்கு தொடுத்து சிறையில் அடைத்தனர்.

பாஜகவை அச்சுறுத்த முடியாது
பாஜக-வை பொறுத்தவரை சிறையை காட்டியெல்லாம் மிரட்டிவிட முடியாது. நாளை முதல் பாஜக எப்படி வீறுகொண்டு எழுந்து செயலாற்றும் என தமிழக முதலமைச்சர் பார்க்கப்போகிறார். நாட்டு மக்கள் மத்தியில் அனைத்து பிரச்னைகளையும் எடுத்து வைப்போம். பாரதமாதா சிலைக்கு மாலை அணிவிக்க சென்றவர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கான பலனை அனுபவிப்பார்கள்.

பாஜக எழுச்சி
பாஜக அஞ்சும் கட்சியல்ல. எந்தப் பிரச்னையையும் சந்திக்கும் மாபெரும் இயக்கமாக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் திரண்டுள்ளது. இனிமேலும் பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டா, அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க பாஜக எழுச்சியோடு எழுந்து நிற்கும் என்று தெரிவித்தார்.
-
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!











Click it and Unblock the Notifications