சரசரவென சரிந்த வீடுகள், மண்ணில் புதைந்த மக்கள்.. நிலச்சரிவில் 77 பேர் பலி, பலர் மாயம்.. நேபாள துயரம்
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 77 பேர் பலியாகி உள்ளனர்
காத்மண்டு: நேபாளத்தின் கிழக்கு மலை பிரதேசங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது... இதனால், அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது... வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதையடுத்து மீட்பு பணிகள் துரிதமாகி உள்ளன.
நேபாளத்தை பொறுத்தவரை, வழக்கமாக ஜுன் முதல் செப்டம்பர் வரை பருவமழை பெய்யும்.. ஆனால், இந்த முறை அக்டோபர் மாதத்திலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது..
அந்த நாட்டில் பெரும்பாலான மலைப்பாங்கு பகுதிகள் உள்ளன.. அதனால், பலத்த மழை பொழிவு ஏற்படும் காலங்களில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களும் ஏற்படுவது இயல்பான ஒன்று.. இப்படிப்பட்ட இயற்கை சீற்றங்களினால், ஒவ்வொரு வருடமும் உயிரிழப்பும் அதிகம் ஏற்படுவதும் வழக்கம்.

கனமழை
அப்படித்தான் இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே கனமழை பொழிந்து கொண்டே இருக்கிறது.. இதனால், திடீர் வெள்ளம் காரணமாக, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஏராளமானோர் அதில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.. கிழக்கு மலை பிரதேசங்களில் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்துபோனதால், மீட்பு பணிகள் மழையால் தாமதமாகி உள்ளன.

77 பேர் உயிரிழப்பு
நேற்று முதல்கட்டமாக 40 பேர் பலியானார்கள் என்று தகவல் வந்தது.. அத்துடன் 30-க்கும் மேற்பட்டோரை காணவில்லை, தேடி கொண்டிருப்பதாக செய்தி வந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன... மேலும் படுகாயம் அடைந்த 22-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்..

26 பேர் மாயம்
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்... ஆனால், இன்னும் 26 பேரை காணவில்லையாம்.. மாயமான அவர்களை தேடும் பணி நடக்கிறது.. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக, கிராமங்களுக்கு இடையிலான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.. அதேபோல மின்சாரம் உட்பட பல்வேறு தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.. ஆயிரக்கணக்கான வீடுகளும், பாலங்களும், சாலைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
Recommended Video

விவசாயிகள் கண்ணீர்
மீட்பு குழுவினர் மிக தீவிரமாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.. இதனிடையே, அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், கிழக்கு பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் காத்மாண்டு வானிலை ஆராய்ச்சி மையம் தற்போது அறிவித்துள்ளது... அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி போயுள்ள நிலையில், பலத்த மழையால் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டிருந்த நெல் வயல்களும் நீரில் மூழ்கி உள்ளது, விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தி வருகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications