Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐஸ்கிரீமை திருடி அம்மா தின்னுட்டாங்க.. போலீசிடம் போட்டு கொடுத்த 4 வயது சிறுவன்.. இறுதியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ‛‛உடனே எங்க வீட்டுக்கு வாங்க.. எங்க அம்மா மிகவும் மோசமாக நடந்து கொள்கிறோர். அவரை பிடித்து செல்லுங்கள்'' என்று போலீசுக்கு போன் போட்டு அமெரிக்காவின் 4 வயது சிறுவன் புகாரளித்ததும், அதன்பிறகு நடந்த சுவாரசிய சம்பவம் பற்றிய விவரமும் வருமாறு:

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் மவுண்ட் பிளசண்ட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி விஸ்கான்சின் எனும் இடம் உள்ளது. இங்கு 4 வயது சிறுவன் வசித்து வருகிறான். கடந்த 4ம் தேதி அந்த சிறுவன் தனது வீட்டில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு போன் செய்தான்.

us ice cream

போலீசாரின் அவசர உதவி எண்ணான 911 டயல் செய்து பேசிய சிறுவன், ‛‛உடனே எங்கள் வீட்டுக்கு வாங்க.. எங்க அம்மா மிகவும் மோசமாக நடந்துகொள்கிறார். அவரை பிடித்து கொண்டு செல்லுங்கள்'' என்று கூறினார்.

இதை கேட்டதும் 2 பெண் போலீஸ் உடனடியாக சிறுவனின் வீட்டு முகவரிக்கு சென்றனர். அப்போது அங்கு 4 வயது சிறுவன் மற்றும் அவரது அம்மா இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், வீட்டில் சிறுவனுக்காக ஐஸ்கிரீம் வாங்கி வைத்துள்ளனர். சிறுவன் அதனை சாப்பிட்டுள்ளான். மேலும் அதில் ஒரு ஐஸ்கிரீமை எடுத்து அவரது அம்மாவும் சாப்பிட்டுள்ளார். இதில் கோபமான சிறுவன் உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு போன் செய்து புகார் அளித்தது தெரியவந்தது.

இதையடுத்து பெண் போலீஸ் சிறுவனை அழைத்து சமாதானம் செய்தனர். அதன்பிறகு அவனுக்கு போலீஸ் சார்பில் ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்கப்பட்டது. இதுபற்றி அமெரிக்காவின் மவுண்ட் பிளசண்ட் போலீஸ் துறை சார்பில் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛கடந்த 4ம் தேதி எங்களுக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய நபர் அம்மா மீது புகார் அளித்தார். அம்மா மோசமாக நடந்து கொள்கிறார். அவரை பிடித்து செல்லுங்கள் என்று கூறினான்.

சிறுவன் போனில் பேசியதை பார்த்ததும் அவரது அம்மா வாங்கி பேசினார். அம்மா கூறும்போது, ‛‛நான் எனது மகனின் ஐஸ்கிரீமை எடுத்து தின்றுவிட்டேன். இதனால் தான் புகார் அளிக்க 911 என்ற எண்ணை அழைத்துள்ளான்'' என்று கூறினார். நாங்கள் வீட்டு முகவரியை கேட்டு கொண்டோம். வீட்டில் ஐஸ்கிரீம் சார்ந்த பிரச்சனை தான் உள்ளதா? இல்லாவிட்டால் வேறு பிரச்சனை இருக்கிறதா? என்பதை அறிய வீட்டுக்கு சென்றோம்.

அப்போது உண்மையில் ஐஸ்கிரீம் பிரச்சனை தான் இருந்தது. சிறுவனின் ஐஸ்கிரீமை அவரது அம்மா சாப்பிட்டதால் தான் எங்களுக்கு புகார் வந்திருப்பது உறுதியானது. அம்மாவை சிறையில் அடைக்க வேண்டுமா? என்று கேட்டபோது சிறுவன் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதோடு அவனின் பிரச்சனை என்பது கூடுதலாக சில ஐஸ்கிரீம்கள் வேண்டும் என்பது தான். இதனால் 2 நாட்களுக்கு பிறகு நாங்கள் மீண்டும் அந்த வீட்டுக்கு சென்று சிறுவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பதிவில் சிறுவனுடன், பெண் போலீஸ் 2 பேர் இருப்பதும், சிறுவன் கையில் ஐஸ்கிரீம் இருக்கும் போட்டோவும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போஸ்ட் இப்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+