பிரபல அமெரிக்க டைரக்டர் கொலை வழக்கு.. 34 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது!
அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி இயக்குனரை கொன்ற குற்றவாளி, 34 ஆண்டுகளுக்கு பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூயார்க்: அமெரிக்காவில் கொலை குற்றவாளி ஒருவர், 34 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் இயக்குனராக வேலை பார்த்தவர் பெரி கிரானே. 'டல்லாஸ்’, 'மிஷன் இம்பாசிபல்’, ஹவாய் ஃபைவ் ஒ’ உள்ளிட்ட பிரபலமான நிகழ்ச்சிகளை இயக்கியவர் இவர்.

34 ஆண்டுகளுக்கு முன்னர் பெரி கிரானே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீஸ் விசாரணையில், பெரியை யாரோ கடுமையாக தாக்கி கொன்றது தெரியவந்தது.
இத்தனை ஆண்டுகளாக பெரியை கொன்றது யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை கையில் எடுத்த புதிய போலீஸ் அதிகாரி ஒருவர், பெரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மறுஆய்வு செய்தார்.
அப்போது பெரியை கொன்றவர் பற்றிய துப்பு கிடைத்தது. இதையடுத்து, தீவிர புலனாய்வுக்கு பிறகு, பெரியை கொன்றது வடக்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த எட்வர்ட் கியாத் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெரியுடன் இருந்த முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக குற்றவாளி வாக்குமூலம் கொடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட எட்வர்ட் கியாத்துக்கு தற்போது 52 வயது ஆகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் கியாத்தை சிறையில் அடைத்து மேலும் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கியாத்துக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications