அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு தாக்கம்! பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத உச்சத்தை தொட்டது!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. தற்போதுவரை டிரம்ப் முன்னிலையில் இருந்து வருகிறார். இந்நிலையில் பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது. 1 பிட்காயினுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு $ 72,000 ஆக அதிகரித்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்திய நேரப்பபடி காலை 10 மணி நிலவரப்படி, ஜனநாயக கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிஸ் 47.2% வாக்குகளையும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 51.4% வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். இது டிரம்பின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த முடிவுகள் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது பிட் காயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

1 பிட்காயினுக்கு நிகரான அமெரிக்க டாலின் மதிப்பு $ 72,000ஆக அதிகரித்துள்ளது. எக்கனாமிக்ஸ் டைம்ஸ் கூற்றுப்படி, இன்ற காலை 8:50 மணி நிலவரப்படி, பிட்காயின் மதிப்பு 8.4% அதிகரித்து $75,060 ஆகவும், ஈதர் மதிப்பு 7.2% உயர்ந்து $2,576 ஆகவும் நிர்ணயமாகியிருக்கிறது என தெரியவந்திருக்கிறது. தனித்தனியாக குறிப்பிடுவதெனில், BNB (+5%), சோலானா (+13.5%), XRP (+5%), Dogecoin (+21.6%), கார்டானோ (+6.6%), ஷிபா இனு (+10%) அவலாஞ்சே (+12.3%), செயின்லிங்க் (+11.4%) என மதிப்புகள் அதகரித்திருக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில், உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயினின் மார்க்கெட் கேப் $1.445 டிரில்லியனாக உயர்ந்துள்ளது என்றும் எக்கனாமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டிருக்கிறது.
ட்ரம்ப் தொடக்கம் முதல் பிட்காயின் குறித்து விமர்சித்துதான் வந்திருக்கிறார். தனக்கு பிட்காயின் பயன்பாட்டில் எந்த நம்பிக்கையும், உடன்பாடும் இல்லையென்று கூறியிருக்கிறார். உலகின் இரும்பு நாணயமாக டாலர் மட்டுமே இருப்பதாகவும், டாலருக்கு நிகரான ரூபாய் வேறு ஏதும் இல்லை என்றும் அவர் கூறி வந்திருக்கிறார். ஆனால் இவர் அதிபராக இருந்த காலத்தில் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யவோ, ஒழிக்கவோ எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அதே நேரத்தில் அதை ஆதரிக்கவும் இல்லை. எனவே, கிரிப்டோ கரன்சி பயன்பாட்டாளர்கள் டிரம்ப் ஆட்சியில் எந்த இடையூறையும் சந்திக்கப்போவதில்லை. இதுவே கூட பிட்காயின் மதிப்பு உயர்வதற்கான காரணமாக இருக்கலாம்.
கடந்த ஜூலை மாதம் ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தில் இருந்தபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் பிட்காயின் மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்தது. ஏனெனில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், ட்ரம்பின் வெற்றியை உறுதி செய்திருந்தது என்று பலரும் கருதியிருந்தனர். இன்று ட்ரம்பின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது. எனவே பிட்காயின் மதிப்பு மீண்டும் உயர்ந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications