எங்கே பரவ கூடாது என்று நினைத்தார்களோ.. அங்கேயே வந்துவிட்டது.. 'ஹு'விற்கு கொரோனா கொடுத்த ஷாக்!
நைஜீரியா உள்ளிட்ட ஏழ்மையான நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது.
நியூயார்க்: நைஜீரியா உள்ளிட்ட ஏழ்மையான நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. உலக சுகாதார மையத்தை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் யாரும் எதிர்பார்க்காத வேகத்தை எடுத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் காரணமாக 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆம், இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் காரணமாக 73824 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர்.
தற்போது இதன் மொத்த எண்ணிக்கை 78824 ஐ தொட்டு இருக்கிறது. அவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதேபோல் கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 2778 ஆக உயர்ந்துள்ளது.

எப்படி முடங்கியது
முதலில் 22 நாடாவுகளில் மட்டுமே பரவியதாக கருதப்பட்ட இந்த வைரஸ் தற்போது 30 நாடுகளில் பரவி உள்ளது. பாகிஸ்தானில் 3 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது. ஜப்பானில் இந்த வைரஸ் 10 பேருக்கும் அதிகமாக தாக்கி இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் மொத்தம் 7 நாடுகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஈரான் மொத்தமாக முடங்கி இருக்கிறது.

தென் கொரியா
அதேபோல் தென் கொரியாவில் இந்த வைரஸ் சீனாவை விட வேகமாக பரவி வருகிறது. தென் கொரியாவில் மொத்தம் 2500 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது. 44 ராணுவ வீரர்களுக்கும் இந்த வைரஸ் தாக்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் கொரோனா வைரஸ் நைஜீரியாவிற்கும் பரவி உள்ளது. ஹு என்று அழைக்கப்படும் உலக சுகாதார மையம் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஏன் அதிர்ச்சி
ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் மட்டும்தான் கொரோனா பரவி வருகிறது என்று உலக சுகாதார மையம் நம்பியது. ஆனால் தற்போது தொடர்பே இல்லாமல் துணை சஹாரன் நாடுகளிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. அதன் ஒரு கட்டமாக நைஜீரியாவில் தற்போது வைரஸ் பரவி உள்ளது. நைஜீரியாவில் வசிக்கும் இத்தாலி இளைஞர் ஒருவருக்கு வைரஸ் ஏற்பட்டுள்ளது.

ஏழ்மையான நைஜிரியா
உலகில் இருக்கும் நாடுகளில் நைஜீரியா மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். இப்படிபட்ட நைஜிரியாவில் பெரிய அளவில் மருத்துவ வசதிகள் இல்லை. இந்த நிலையில் அங்கு கொரோனா பிறவி இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்ரிக்க நாடுகள், நைஜீரியா போன்ற நாடுகளில் இந்த வைரஸை கட்டுப்படுத்துவது கடினம். அதனால் இங்கு வைரஸ் பரவாமல் இருக்க வேண்டும் என்று ஹு முயற்சி செய்து வந்தது.

நடந்துவிட்டது
ஆனால் ஹு பயந்தது போலவே தற்போது நைஜீரியாவிற்கும் வைரஸ் பரவி உள்ளது. மேலும் மங்கோலியாவிற்கும் இந்த வைரஸ் பரவி உள்ளது. அங்கு மங்கோலியன் அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். ஏழை நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவுவது பெரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால்தான் சர்வதேச மார்க்கெட் சரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications