அந்த மருந்தை எங்களிடம் கொடுங்கள்.. ஜெர்மனியிடம் பேரம் பேசினாரா டிரம்ப்?.. கொரோனா யுத்தம் தொடங்கியது!
கொரோனா தொடர்பாக ஜெர்மன் தனியார் நிறுவனம் ஒன்று உருவாக்கி உள்ள மருந்தை அமெரிக்கா மொத்தமாக வாங்க போவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.
நியூயார்க்: கொரோனா தொடர்பாக ஜெர்மன் தனியார் நிறுவனம் ஒன்று உருவாக்கி உள்ள மருந்தை அமெரிக்கா மொத்தமாக வாங்க போவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. ஜெர்மனி முழுக்க இதனால் பெரிய அளவில் பரபரப்பு எழுந்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்தவோ அல்லது முன்னெச்சரிக்கையாகவே இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் மிக தீவிரமாக போட்டியிட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் இதற்காக தீவிரமாக உழைத்து வருகிறார்கள்.

அமெரிக்கா எப்படி
இந்த நிலையில் இந்த வைரசுக்கு எதிராக அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம், மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதை இன்று சோதனை செய்ய இருக்கிறார்கள். இன்றில் இருந்து இதை வைத்து பல்வேறு சோதனைகள் செய்வார்கள். பல்வேறு வயதை சேர்ந்த மக்களிடம் இந்த மருந்தை சோதனை செய்வார்கள். இந்த மருந்து கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தும், பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று சோதனைகள் செய்ய உள்ளனர்.

ஆனால் சிக்கல்
ஆனால் இன்னும் ஒரு வருடம் அல்லது 18 மாதங்கள் இதை சோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் இதை மக்களிடம் பயன்படுத்த முடியும். இப்போதைக்கு இந்த மருந்து சந்தைக்கு வராது. எனவே உடனே கொரோனாவிற்கு எதிராக அவசரமாக மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா யோசித்து வருகிறது. இதனால்தான் தற்போது ஜெர்மன் நிறுவனம் ஒன்றை வளைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.

ஜெர்மன் எப்படி
அமெரிக்காவில் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் நடக்கும் நிலையில் ஜெர்மனியில் இன்னொரு பக்கம் Curevac என்ற தனியார் நிறுவனம், இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே மருந்து கண்டுபிடித்துவிட்டது. ஆம் ஒரு மாதத்திற்கு முன்பே இந்த வைரசுக்கு எதிராக அந்த நிறுவனம் மருந்து கண்டுபிடித்துள்ளது. க்யூர்வேக் நிறுவனம் தற்போது இந்த மருந்தை சோதனை செய்து வருகிறது. இந்த மருந்து பெரும்பாலும் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்கிறார்கள். அதாவது அமெரிக்காவிற்கு முன்பாக க்யூர்வேக் தனது மருந்தை சந்தைக்கு கொண்டு வரும்.

சந்தைக்கு வரும்
இதுதான் தற்போது அமெரிக்காவை அச்சப்படுத்தி உள்ளது. தங்களுக்கு முன் ஜெர்மன் நிறுவனம் ஒன்று மருந்தை சந்தைக்கு கொண்டு வந்தால் அது தங்களுக்கு பெரிய பிரச்சனை ஆகும். ஜெர்மன் இதனால் பெரிய அளவில் வளரும், ஜெர்மன் நாடு புதிய சக்தியாக உருவெடுக்கும் என்று அமெரிக்கா அச்சப்படுகிறது. இதுதான் இந்த மருந்து தொடர்பான சண்டைக்கு காரணம் ஆகும். அதன்படி க்யூர்வேக் நிறுவனத்திடம் இருந்து மருந்தை வாங்க அமெரிக்கா முயன்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

எம்பிக்கள் எப்படி
க்யூர்வேக் நிறுவனத்திற்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் பல கோடிகளை கொடுப்பதாக கூறினார். இந்த மருந்தை கொடுங்கள் பல கோடி கொடுக்கிறோம். எங்களிடம் இதற்கான உரிமையை கொடுங்கள் என்று பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெர்மன் எம்பிக்கள், அந்நாட்டு செய்தித்தாள்கள் இந்த புகாரை வைத்துள்ளனர். இந்த வைரஸ் மருந்தை வைத்து உலக நாடுகளை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி எடுப்பதாக ஜெர்மன் குற்றஞ்சாட்டி உள்ளது.

சண்டை பெரிதாகியது
இவர்கள் பேரம் பேசியதற்கான ஆதாரங்கள் இணையத்தில் நிறைய வெளியாகி உள்ளது. ஜெர்மன் அமெரிக்கா இடையே இதனால் சண்டை பெரிதாகி உள்ளது. ஏற்கனவே இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க ரஷ்யா முயன்று வருகிறது . தற்போது ஜெர்மன் அமெரிக்கா இடையே வந்துள்ள சண்டை இன்னும் விஸ்வரூபம் எடுக்கலாம் என்கிறார்கள். கொரோனா காரணமாக உலக அளவில் பெரிய அரசியல் திருப்பங்கள் நடக்கலாம் என்று கூறுகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications