உலகம் முழுக்க மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. ஆனால் ஒரு நல்ல செய்தி.. "ஹு" சவுமியா சாமிதான் பேட்டி!
நியூயார்க்: உலகம் முழுக்க அடுத்த சில காலத்திற்கு கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார மையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுக்க பல நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக ஐரோப்பா, அமெரிக்காவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. ரஷ்யா, துருக்கியில் புதிய கேஸ்கள் உச்சம் தொட்டுள்ளது.
உலகம் முழுக்க கொரோனா காரணமாக 254,526,896 பேர் இதுவரை பாதிப்பு அடைந்துள்ளனர். 401,386 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு அடைந்துள்ளனர்.

பேட்டி
இந்த நிலையில் உலக சுகாதார மையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் சவுமியா சாமிநாதன் அளித்த பேட்டியில், உலகின் பல நாடுகளில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக ஐரோப்பா நாடுகளில் பல இடங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சவுமியா சாமிதான்
ஆனால் நல்லது என்னவென்றால், கொரோனா மரணங்கள் குறைவாகவே உள்ளது வேக்சின் எடுத்த காரணத்தால் கொரோனா பாதிக்கப்படும் பலர் பலியாவது தடுக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள் பலர் வேக்சின் எடுத்துக்கொண்ட காரணத்தால் கொரோனா மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளது. வேக்சின் காரணமாக மரணங்கள் குறைந்துள்ளன.

மரணம்
புதிய ஆய்வின்படி கொரோனா வேக்சின் காரணமாக நீண்ட நாட்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் இருக்கும் ஆண்டிபாடி அளவு குறைந்தால் கூட நோய் எதிர்ப்பு சக்தி அதிக நாட்கள் இருக்கும். நல்ல உடல்நிலை கொண்ட ஒருவர் 2 டோஸ் எடுக்கும் பட்சத்தில் அவருக்கு 1 வருடத்திற்கும் மேலாக கூட எதிர்ப்பு சக்தி இருக்கும்.

ஆய்வு
கொரோனா நோய் பாதித்தாலும் அதனால் இயற்கையாக உடலில் ஆண்டிபாடி ஏற்படும். ஆனால் எல்லோருக்கும் வலுவாக இருக்காது. சிலருக்கு வலுவாக இருக்கும். சிலருக்கு இயற்கையாக வரும் ஆண்டிபாடி சில நாட்களில் வலிமை இழக்கும். இதனால் வேக்சின் போடுவது முக்கியம்.
Recommended Video

வேக்சின்
வேக்சின் பூஸ்டர்கள் என்பது சுவாரசியமான விஷயம். ஆனால் இதை யாருக்கும் கொடுக்க வேண்டும் என்ற உறுதியான வரையறை இல்லை. இதற்கு நிறைய டேட்டா வேண்டும். டேட்டாக்களை பார்க்காமல் நாம் இந்த பூஸ்டர் டோஸை எல்லோரின் பயன்பாட்டிற்கும் பரிந்துரைக்க முடியாது, என்று உலக சுகாதார மையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications