சர்வதேச மார்க்கெட்டில்.. வரலாறு காணாத அளவுக்கு எகிறிய தங்கம் விலை! டிரம்ப்தான் காரணம்
நியூயார்க்: சர்வதேச சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டிருக்கிறது. இன்று மதியம் நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 2,971 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகிறது. இது இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி அறிவிப்பு இருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

AFP செய்தி ஊடகத்தின் தகவலின் படி ஒரு அவுன்ஸ் தங்கம் இந்திய மதிப்பில் ₹2,60,733க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இன்று மதியம் அதிபர் டிரம்ப், ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஷாம்பெயின், வைன் மற்றும் இதர மதுபான வகைகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வந்ததையடுத்து தங்கம் விலை சரசரவென உயர்ந்திருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் பணத்தை நம்பி போடும் துறையாக மதுபான துறை இருந்தது. சரக்கடிக்காமல் யாராவது இருப்பார்களா? எனவே சாராயத்திற்கு எப்போதும் டிமான்ட் அதிகம். வருவாயும் அதிகம். எனவே, முதலீட்டாளர்கள் விரும்பும் துறையாக இது இருக்கிறது. ஆனால், டிரம்ப்பின் அறிவிப்பால் முதலீட்டாளர்கள் ஜாகா வாங்கியிருக்கிறார்கள். முதலீடு போட தயங்குகிறார்கள். மட்டுமல்லாது பாதுகாப்பான முதலீடு தங்கம்தான் என்று நம்பியுள்ளனர்.
இதனால் பலரும் தங்கத்தை நோக்கி ஓடுகின்றனர். தேவை அதிகமாக அதன் மதிப்பும் உயரும் என்பது அடிப்படை விதி. அதுபோலவே தற்போது தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
டிரம்பின் அறிவிப்பும் தங்கம் விலையுயர்வும்:
உதாரணத்திற்கு பிரான்சின் Moët & Chandon ரக ஷாம்பெயினை எடுத்துக்கொள்வோம். இந்த சரக்கின் 750 மி.லி பாட்டிலின் விலை பிரான்சில் ரூ.3,975. இதே அமெரிக்காவில் ரூ.4,694 மதிப்பில் விற்பனையாகிறது. ஆனால், டிரம்ப் வரியை போட்டால் அமெரிக்காவில் இந்த சரக்கின் விலை உயர்ந்துவிடும். விலை அதிகமானால் மற்ற ஊர் சரக்கை தேடி குடி'மகன்கள் நகர்ந்துவிடுவார்கள். இதனால் பிரான்சின் ஒவ்வொர பிராண்ட சரக்கின் வியாபாரமும் மந்தமாகிவிடும். பிரான்ஸ் மட்டுமல்லாது ஐரோப்பி நாடுகளின் மொத்த ஆல்கஹால் வியாபாரமும் நசநசத்துவிடும். எனவேதான் முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளனர்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்திருப்பதால், இந்திய சந்தையிலும் இந்த விலை உயர்வு எதிரொலிக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications