அமைதி பேச்சா?.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்
Recommended Video
நியூயார்க்: பாகிஸ்தானுடன் எப்போது அமைதி பேச்சுவார்த்தை என கேள்வி எழுப்பிய அந்நாட்டு நிருபர்களிடம் சென்ற இந்திய தூதர், உங்களிடம் இருந்தே தொடங்கலாம் என கூறி கைகுலுக்கி அவர்களை திக்குமுக்காடச் செய்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு பாகிஸ்தானும் சீனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கொண்டு சென்றது. மேலும் இதுகுறித்த ரகசிய ஆலோசனைக்கு பாகிஸ்தானும் சீனாவும் மற்ற உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தன.

தூதர்
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் தையது அக்பருதீன் செய்தியாளர்களை சந்தித்தார்.
தொடங்கும்
அப்போது அவர் கூறுகையில் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்தியா எடுத்த நடவடிக்கை முழுக்க முழுக்க உள்விவகாரம் ஆகும். இதில் எந்த ஒரு நாடும் தலையிட முடியாது என்றார். அப்போது பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தையை எப்போது இந்தியா தொடங்கும் என அந்நாட்டு நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

கைகுலுக்குதல்
அப்போது அந்த நிருபரை நோக்கி சென்ற அங்கிருந்த 3 பாகிஸ்தான் நிருபர்களுடன் கைகுலுக்கிய அக்பருதீன், உங்களை நோக்கி நான் வந்துவிட்டேன். கைகுலுக்குவதன் மூலம் உங்களிடம் இருந்து தொடங்கலாம் என்றார்.

தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும்
இதை பார்த்த மற்ற பத்திரிகையாளர்கள் சிரித்தனர். பின்னர் அக்பருதீன் கூறுகையில் சிம்லா உடன்படிக்கையின்படி நாங்கள் செயல்பட தயாராக இருக்கிறோம். இவ்வாறு கூறுவதன் மூலம் நட்புக்கான கரத்தை நீட்டிவிட்டோம். இனி பாகிஸ்தானிடம் இருந்துதான் பதில் வர வேண்டும். அதற்காக காத்திருக்கிறோம். ஆனால் தீவிரவாதத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் தொடங்கலாம் என்றார்.
-
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது?












Click it and Unblock the Notifications