30 நிமிடத்தில் கொரோனாவை கொல்கிறது.. ஆச்சர்யம் தந்த "மவுத் வாஷ்".. யுகே ஆய்வில் கண்டுபிடிப்பு!
நியூயார்க்: மக்கள் பயன்படுத்தும் மவுத் வாஷ்கள் கொரோனாவை கொல்லும் திறனை கொண்டு இருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யுனைட்டட் கிங்கிடமில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் கொரோனா தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. அங்கு செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் மக்கள் பயன்படுத்தும் மவுத் வாஷ் மூலம் கொரோனாவை கொல்ல முடியும் என்று கூறியுள்ளனர்.
வாயை சுத்தப்படுத்த உதவும் மவுத் வாஷ் லோஷன்கள் மூலம் கொரோனாவை கொல்ல முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

முதல் கட்டம்
கார்டிப் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டு இருக்கும் இந்த ஆய்வு முதல் கட்ட முடிவுதான் என்று கூறப்படுகிறது. இந்த ஆய்வின் படி மக்கள் பயன்படுத்தும் மவுத் வாஷ் கொரோனாவை உடனே கொல்கிறது. கொரோனா வைரஸ் உடன் தொடர்பு கொண்ட 30 நொடிகளில் அந்த வைரஸை மவுத் வாஷ் கொல்கிறது.

எப்படி
மவுத் வாஷ்களில் இருக்கும் சிபிசி எனப்படும் cetylpyridinium chloride (CPC) வேதிப்பொருள்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மவுத் வாஷ்களில் 0.07 % க்கும் அதிகமாக சிபிசி இருந்தால் அது எளிதாக கொரோனாவை கொல்கிறது. கொரோனாவை கொல்லும் காரணியாக இது செயல்படுகிறது என்கிறார்கள்.

யார்
அந்த பல்கலைக்கழத்தில் இருக்கும் பேராசிரியர் டேவிட் தாமஸ் தலைமையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. Dentyl எனப்படும் நிறுவனத்தின் மவுத் வாஷில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. இது ஆய்வு கூட சோதனை ஆகும். ஆய்வு கூடத்தில் கொரோனாவை இந்த மவுத் வாஷ் கொன்றுள்ளது.

மக்கள்
மக்களிடம் இந்த மவுத் வாஷை வைத்து சோதனை செய்ய வேண்டும். அதன்பின்பே முழுமையான முடிவுகள் தெரியும். இந்த சோதனைகளை 2021ல் முடிப்போமென்று கார்டிப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த மவுத் வாஷ் கொரோனா பரவலை தடுப்பதில் பெரிய பங்கு வகிக்கும் என்று அந்த பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அதே சமயம் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களை இது குணப்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

எப்படி
கொரோனாவிற்கு எதிராக பிரிட்டனில் தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டர்செனகா நிறுவனம் இணைந்து தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. அதேபோல் கொரோனாவிற்கு எதிராக ஃபைசர், மாடர்னா போன்ற நிறுவனங்கள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில் தற்போது மவுத் வாஷ் மூலம் கொரோனா அழியும் என்று ஆய்வு முடிவுகள் ஆச்சர்யம் அளிக்கிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications