நியூயார்க்கில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது... ஒரே நாளில் 671 பேர் பலி
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் நியூயார்க்கில் 671 பேர் கொரோனாவால் இறந்தனர் என்று அம்மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ கூமோ தெரிவித்தார் . மோசமான நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக தான் நம்புவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 577,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 17,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் 23086 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரு நாளில் மட்டும் 981 பேர் இறந்துள்ளனர். இதுவே உலகில் ஒரு நாட்டில் கொரோனாவால் நேற்று ஒரு நாளில் மிக அதிகபட்சமான உயிரிழப்பு ஆகும்

அமெரிக்காவின் நியூயார்க்கில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 671 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நியூயார்க்கில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10,056 ஆக உயர்ந்துள்ளது. நியூயார்க் மாகாணத்தில் கொரோனாவால் 195031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளில் மட்டும் 5616 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது அங்குநேற்று ஒரு நாளில் மட்டும் 566 பேர் இறந்தனர் ஒட்டுமொத்தமாக 20465 பேர் இறந்துள்ளனர். ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 280 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் அங்கு இதுவரை 17489 பேர் இறந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications